டெல்லி: ஆசியா கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் 18 பேர் இடம் பிடித்துள்ளனர்.
இந்திய அணி வீரர்களை தலைமை தேர்வாளர் அஜீத் அகர்கர் அறிவித்தார். அப்போது கேப்டன் ரோஹித் சர்மாவும் உடன் இருந்தார்.
அணி விவரம்:
ரோஹித் சர்மா (கேப்டன்)
சுப்மன் கில்
விராட் கோலி
ஷிரேயாஸ் அய்யர்
கே.எல். ராகுல்
சூர்யகுமார்யாதவ்
திலக் வர்மா
இஷான் கிஷன்
ஹர்டிக் பாண்ட்யா (துணை கேப்டன்)
ரவீந்திர ஜடேஜா
ஷர்துள் தாக்கூர்
அக்ஸார் படேல்
குல்தீப் யாதவ்
ஜஸ்ப்ரீத் பும்ரா
முகம்மது சமி
முகம்மது சிராஜ்
பி.கிருஷ்ணா
சஞ்சு சாம்சன்
உலகக் கோப்பை தொடரை மனதில் வைத்து இந்த அணியைத் தேர்வு செய்துள்ளதாம் இந்திய அணி தேர்வுக் குழு. இதில் கே.எல்.ராகுல் மற்றும் ஷிரேயாஸ் அய்யர் ஆகியோர் காயம் காரணமாக சந்தேக வளையத்தில் இருந்தவர்கள். இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஐஸ்ப்ரீத் பும்ராவும் ஒரு ஆச்சரியகரமான சேர்ப்புதான். அயர்லாந்து டி20 தொடரிலும் பும்ரா சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}