காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து தோனி முழுமையாக குணமடைந்து விட்டார்: தீபக் சஹார்

Jan 29, 2024,04:26 PM IST

சென்னை: காலில் எற்பட்ட  காயத்தில் இருந்து கேப்டன் எம்எஸ் தோனி முழுமையாக குணமடைந்து விட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை கோப்பைகளை வென்றவர் தோனி. 16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இவர் அணியின் கேப்டனாக தொடர்ந்து நீடித்து வருகிறார். ஒரு ஐபிஎல் அணியின் கேப்டனாக, அது உருவாக்கப்பட்டது முதல் நீடித்து வரும் ஒரே கேப்டன் தோனி மட்டுமே.


முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் மீண்டும் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், ஐபிஎல் ஏலத்தில் தோனியை சென்னை அணி தக்கவைத்துக் கொண்டது.  இந்த நிலையில், தோனி முழங்கால் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாகவும் இன்னும் இரண்டு அல்லது மூன்று சீசன்களை அவர் விளையாடலாம் என்றும் தீபக் சஹார் தெரிவித்துள்ளார். 




மேலும் அவர் பேசுகையில், தனது கடைசி ஆட்டத்தை சென்னையில் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார் தோனி. ஓய்வு குறித்து அவர்தான் முடிவு செய்வார். அவர் இல்லாமல் சென்னை அணிக்காக விளையாடுவது மிகவும் கடினம். அனைவரும் தோனி இருக்கும் சிஎஸ்கே அணியை தான் பார்த்திருக்கிறார்கள். தோனியுடன் நெருங்கி பழக ரெண்டு மூன்று ஆண்டுகள் ஆனது. எளிமையான பழக்கவழக்கமுடையவர். எல்லோரையும் சமமாக நடத்தக் கூடியவர். 


அதே சமயத்தில் அவர் கிரிக்கெட் குறித்து தெளிவான புரிதலுடன் இருப்பவர். அவருடன் டைம் ஸ்பெண்ட் பண்ணுவது, கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் பிடிக்கும். தோனி மீது தனிப்பட்ட முறையில் அதிக பாசம் எனக்கு உண்டு. அவரை எனது அண்ணன் போலத்தான் நான் பார்க்கிறேன். அவருக்கும் நான்   ஒரு தம்பி போலத்தான் என்று பாசத்துடன் கூறியுள்ளார் சஹார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

news

செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!

news

தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்