சென்னை: காலில் எற்பட்ட காயத்தில் இருந்து கேப்டன் எம்எஸ் தோனி முழுமையாக குணமடைந்து விட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை கோப்பைகளை வென்றவர் தோனி. 16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இவர் அணியின் கேப்டனாக தொடர்ந்து நீடித்து வருகிறார். ஒரு ஐபிஎல் அணியின் கேப்டனாக, அது உருவாக்கப்பட்டது முதல் நீடித்து வரும் ஒரே கேப்டன் தோனி மட்டுமே.
முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் மீண்டும் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், ஐபிஎல் ஏலத்தில் தோனியை சென்னை அணி தக்கவைத்துக் கொண்டது. இந்த நிலையில், தோனி முழங்கால் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாகவும் இன்னும் இரண்டு அல்லது மூன்று சீசன்களை அவர் விளையாடலாம் என்றும் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், தனது கடைசி ஆட்டத்தை சென்னையில் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார் தோனி. ஓய்வு குறித்து அவர்தான் முடிவு செய்வார். அவர் இல்லாமல் சென்னை அணிக்காக விளையாடுவது மிகவும் கடினம். அனைவரும் தோனி இருக்கும் சிஎஸ்கே அணியை தான் பார்த்திருக்கிறார்கள். தோனியுடன் நெருங்கி பழக ரெண்டு மூன்று ஆண்டுகள் ஆனது. எளிமையான பழக்கவழக்கமுடையவர். எல்லோரையும் சமமாக நடத்தக் கூடியவர்.
அதே சமயத்தில் அவர் கிரிக்கெட் குறித்து தெளிவான புரிதலுடன் இருப்பவர். அவருடன் டைம் ஸ்பெண்ட் பண்ணுவது, கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் பிடிக்கும். தோனி மீது தனிப்பட்ட முறையில் அதிக பாசம் எனக்கு உண்டு. அவரை எனது அண்ணன் போலத்தான் நான் பார்க்கிறேன். அவருக்கும் நான் ஒரு தம்பி போலத்தான் என்று பாசத்துடன் கூறியுள்ளார் சஹார்.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}