சென்னை: காலில் எற்பட்ட காயத்தில் இருந்து கேப்டன் எம்எஸ் தோனி முழுமையாக குணமடைந்து விட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை கோப்பைகளை வென்றவர் தோனி. 16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இவர் அணியின் கேப்டனாக தொடர்ந்து நீடித்து வருகிறார். ஒரு ஐபிஎல் அணியின் கேப்டனாக, அது உருவாக்கப்பட்டது முதல் நீடித்து வரும் ஒரே கேப்டன் தோனி மட்டுமே.
முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் மீண்டும் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், ஐபிஎல் ஏலத்தில் தோனியை சென்னை அணி தக்கவைத்துக் கொண்டது. இந்த நிலையில், தோனி முழங்கால் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாகவும் இன்னும் இரண்டு அல்லது மூன்று சீசன்களை அவர் விளையாடலாம் என்றும் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், தனது கடைசி ஆட்டத்தை சென்னையில் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார் தோனி. ஓய்வு குறித்து அவர்தான் முடிவு செய்வார். அவர் இல்லாமல் சென்னை அணிக்காக விளையாடுவது மிகவும் கடினம். அனைவரும் தோனி இருக்கும் சிஎஸ்கே அணியை தான் பார்த்திருக்கிறார்கள். தோனியுடன் நெருங்கி பழக ரெண்டு மூன்று ஆண்டுகள் ஆனது. எளிமையான பழக்கவழக்கமுடையவர். எல்லோரையும் சமமாக நடத்தக் கூடியவர்.
அதே சமயத்தில் அவர் கிரிக்கெட் குறித்து தெளிவான புரிதலுடன் இருப்பவர். அவருடன் டைம் ஸ்பெண்ட் பண்ணுவது, கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் பிடிக்கும். தோனி மீது தனிப்பட்ட முறையில் அதிக பாசம் எனக்கு உண்டு. அவரை எனது அண்ணன் போலத்தான் நான் பார்க்கிறேன். அவருக்கும் நான் ஒரு தம்பி போலத்தான் என்று பாசத்துடன் கூறியுள்ளார் சஹார்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}