12,000 பேர் டிஸ்மிஸ் சரிதான்.. ஆனால்.. சுந்தர் பிச்சையை எச்சரிக்கை செய்த  முதலீட்டாளர்

Jan 24, 2023,12:25 PM IST
லிபோர்னியா: கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களில் 12,000 பேரை டிஸ்மிஸ் செய்தது சரியான நடவடிக்கைதான். ஆனால் இது போதாது. இன்னும் பல ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று கூகுள் முதலீட்டாளர் கிறிஸ்டோபர் ஹான் கூறியுள்ளார்.



இதுதொடர்பாக கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான சுந்தர் பிச்சைக்கு கடிதம் ஒன்றையும் அவர் அனுப்பியுள்ளார்.  கூகுள் நிறுவனம் ஜனவரி 21ம் தேதி 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இது ஐடி உலகை அதிர வைத்துள்ள நிலையில் இது போதாது என்று கூகுள் நிறுவனத்தில் 6 பில்லியன் டாலர் பங்குகளை வைத்துள்ள முதலீட்டாளர் கிறிஸ்டோபர் ஹான் கூறியுள்ளது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

இதுதொடர்பாக ஹான் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

6 சதவீத ஊழியர்களை கூகுள் வேலைநீக்கம் செய்திருப்பது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை.  ஆனால் இது வளர்ச்சிக்கு உதவாது. இன்னும் பல ஆயிரம்  பேரை நீக்கியாக வேண்டும்.  கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆல்பாபெட் நிறுவனம் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக அதிகரித்து விட்டது.  இதை 1.5 லட்சமாக குறைக்க வேண்டும். இன்னும் 20 சதவீத ஊழியர்களை குறைத்தால்தான் நல்லது. 
இதுதொடர்பாக விரைவில் உங்களுடன் பேச வேண்டும் என்று ஹான் கூறியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக ஆல்பாபெட் நிறுவனம் கூகுள், யூடியூப் மற்றும் தனது பிற தயாரிப்புகளை மேம்படுத்த பல்வேறு திறமையாளர்களை நிறுவனத்தில் இணைத்துக் கொண்டே வந்தது. இதனால் ஊழியர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்