12,000 பேர் டிஸ்மிஸ் சரிதான்.. ஆனால்.. சுந்தர் பிச்சையை எச்சரிக்கை செய்த  முதலீட்டாளர்

Jan 24, 2023,12:25 PM IST
லிபோர்னியா: கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களில் 12,000 பேரை டிஸ்மிஸ் செய்தது சரியான நடவடிக்கைதான். ஆனால் இது போதாது. இன்னும் பல ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று கூகுள் முதலீட்டாளர் கிறிஸ்டோபர் ஹான் கூறியுள்ளார்.



இதுதொடர்பாக கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான சுந்தர் பிச்சைக்கு கடிதம் ஒன்றையும் அவர் அனுப்பியுள்ளார்.  கூகுள் நிறுவனம் ஜனவரி 21ம் தேதி 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இது ஐடி உலகை அதிர வைத்துள்ள நிலையில் இது போதாது என்று கூகுள் நிறுவனத்தில் 6 பில்லியன் டாலர் பங்குகளை வைத்துள்ள முதலீட்டாளர் கிறிஸ்டோபர் ஹான் கூறியுள்ளது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

இதுதொடர்பாக ஹான் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

6 சதவீத ஊழியர்களை கூகுள் வேலைநீக்கம் செய்திருப்பது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை.  ஆனால் இது வளர்ச்சிக்கு உதவாது. இன்னும் பல ஆயிரம்  பேரை நீக்கியாக வேண்டும்.  கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆல்பாபெட் நிறுவனம் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக அதிகரித்து விட்டது.  இதை 1.5 லட்சமாக குறைக்க வேண்டும். இன்னும் 20 சதவீத ஊழியர்களை குறைத்தால்தான் நல்லது. 
இதுதொடர்பாக விரைவில் உங்களுடன் பேச வேண்டும் என்று ஹான் கூறியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக ஆல்பாபெட் நிறுவனம் கூகுள், யூடியூப் மற்றும் தனது பிற தயாரிப்புகளை மேம்படுத்த பல்வேறு திறமையாளர்களை நிறுவனத்தில் இணைத்துக் கொண்டே வந்தது. இதனால் ஊழியர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்