12,000 பேர் டிஸ்மிஸ் சரிதான்.. ஆனால்.. சுந்தர் பிச்சையை எச்சரிக்கை செய்த  முதலீட்டாளர்

Jan 24, 2023,12:25 PM IST
லிபோர்னியா: கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களில் 12,000 பேரை டிஸ்மிஸ் செய்தது சரியான நடவடிக்கைதான். ஆனால் இது போதாது. இன்னும் பல ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்று கூகுள் முதலீட்டாளர் கிறிஸ்டோபர் ஹான் கூறியுள்ளார்.



இதுதொடர்பாக கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான சுந்தர் பிச்சைக்கு கடிதம் ஒன்றையும் அவர் அனுப்பியுள்ளார்.  கூகுள் நிறுவனம் ஜனவரி 21ம் தேதி 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இது ஐடி உலகை அதிர வைத்துள்ள நிலையில் இது போதாது என்று கூகுள் நிறுவனத்தில் 6 பில்லியன் டாலர் பங்குகளை வைத்துள்ள முதலீட்டாளர் கிறிஸ்டோபர் ஹான் கூறியுள்ளது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

இதுதொடர்பாக ஹான் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

6 சதவீத ஊழியர்களை கூகுள் வேலைநீக்கம் செய்திருப்பது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை.  ஆனால் இது வளர்ச்சிக்கு உதவாது. இன்னும் பல ஆயிரம்  பேரை நீக்கியாக வேண்டும்.  கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆல்பாபெட் நிறுவனம் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக அதிகரித்து விட்டது.  இதை 1.5 லட்சமாக குறைக்க வேண்டும். இன்னும் 20 சதவீத ஊழியர்களை குறைத்தால்தான் நல்லது. 
இதுதொடர்பாக விரைவில் உங்களுடன் பேச வேண்டும் என்று ஹான் கூறியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக ஆல்பாபெட் நிறுவனம் கூகுள், யூடியூப் மற்றும் தனது பிற தயாரிப்புகளை மேம்படுத்த பல்வேறு திறமையாளர்களை நிறுவனத்தில் இணைத்துக் கொண்டே வந்தது. இதனால் ஊழியர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்