Cyclone DANA.. வருகிறது வட கிழக்குப் பருவ காலத்தின் முதல் புயல்.. ஒடிஷாவுக்கு எச்சரிக்கை!

Oct 20, 2024,01:09 PM IST

சென்னை: வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகவுள்ளது. இது புயலாக மாறி ஒடிஷாவை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் உருவாகும்போது அதற்கு டானா என்று பெயர் சூட்டப்படும். கத்தார் நாடு பரிந்துரைத்த பெயர் இது.


வட கிழக்குப் பருவ மழை இந்தியாவில் தொடங்கியுள்ளது. தொடக்கமே அதிரடியாக இருந்தது. முதல் ஸ்பெல் மழை சூப்பராக பெய்து முடிந்துள்ள நிலையில் அடுத்து வங்கக் கடலில் ஒரு புதிய புயல் உருவாகப் போகிறது. நாளை வங்கக் கடலில், அந்தமான் பகுதியில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறுமாம். ஒடிஷா கடற்கரையை நோக்கி இது நகரும் என்பதால் தமிழ்நாட்டுக்கு ஆபத்தில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




அக்டோபர் 24 அல்லது 25ம் தேதி இது ஒடிஷாவில் கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக் கடலில் நிலவிய தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. அதேபோல பெங்களூரும் வெள்ளக்காடானது. ஆந்திராவிலும் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக திருப்பதி கோவிலில் தண்ணீர் தேங்கும் அளவுக்கு மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்து வரும் புயலானது, தென் மாநிலங்களுக்குப் பாதிப்பைத் தராது என்று கூறப்படுகிறது. நடப்பு மழை சீசனில் வரும் முதல் புயல் இதுதான்.


நாளை உருவாகப் போகும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தெரற்கு மேற்கு வங்காளம் முதல் கடலோரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒடிஷா மட்டுமல்லாமல், வங்கதேசம், மியான்மர் வரையும் இந்த புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்