புதுச்சேரி: ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டை அச்சுறுத்தி விட்டு கடைசியில் புதுச்சேரியை பதம் பார்த்து விட்டது. புதுச்சேரியில் புயல் காரணமாக மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஊரே வெள்ளக்காடாகியுள்ளது. புயல் கரையைக் கடந்தும் கூட அங்கு இன்னும் மழை பெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த 1 வாரத்திற்கும் மேலாக எல்லோரையும் படபடக்க வைத்து விட்டது. முதலில் வேகமாக கிளம்பி வந்த இந்தப் புயலானது பின்னர் மெதுவாக நகர்ந்தது. இடையில் புயலாக மாறாது என்றும் கணிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் வலுவடைந்த புயலாக மாறி போக்குக் காட்டிக் கொண்டே வந்தது. நேற்று மாலைக்கு மேல் அது புதுச்சேரிக்கு வெகு அருகே கரையைக் கடந்தது.

புயல் தமிழ்நாட்டுக் கரைப் பகுதியில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதுச்சேரியை மையமாக வைத்து அது கடந்ததால் புதுச்சேரிக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. புதுச்சேரியில் மிக அதிக கன மழைக் கொட்டித் தீர்த்தது. சூறைக்காற்றும் சேர்ந்து கொண்டதால் ஊரே ஸ்தம்பித்துப் போனது. மின்சாரம் பாதிக்கப்பட்டு, ஊரே வெள்ளக்காடாகி விட்டது. நேற்று மாலை முதல் அதீதமாக கொட்டித் தீர்த்த மழை புயல் கரையைக் கடந்த சமயத்தில் மேலும் அதிகரித்தது. கடுமையான சூறாவளிக் காற்றும் சேர்ந்து கொண்டதால் புதுச்சேரி ஸ்தம்பித்தது.
புயல் நள்ளிரவு போலத்தான் முழுமையாக கடந்து சென்றது. அதன் பிறகும் மழை விடவில்லை. காலையிலும் மழை தொடர்ந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் கிட்டத்தட்ட 470 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேசமயம் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 498 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டத்திலும் அதீத கன மழை பெய்துள்ளது.
புதுச்சேரியில் முக்கிய சாலைகளில் எல்லாம் வெள்ளம் போல மழை நீர் ஓடிக் கொண்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் நீர் புகுந்துள்ளது. சரியான வடிகால் வசதிகள் இல்லாததால் மழை நீர் வழிந்தோட முடியாமல் திணறிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் மீட்புப் பணிகளில் ராணுவத்தை ஈடுபடுத்த புதுச்சேரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விரைவில் மீட்புப் படையினர் விரைந்து வரவுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}