சென்னை: ஃபெஞ்சல் புயல் முழுமையாக கரையைக் கடந்து விட்ட போதிலும் கூட புதுச்சேரி அருகே அது இன்னும் கலையாமல் அப்படியே நிலை கொண்டுள்ளதால் இன்றும் சில மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக அலைக்கழித்து வந்த ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு புதுச்சேரிக்கு வெகு அருகே கரையைக் கடந்தது. இதனால் புதுச்சேரி முழுவதும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. அதேபோல விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வெள்ளக்காடானது. குறிப்பாக மயிலம் பகுதியில் கிட்டத்தட்ட 498 மில்லி மீட்டர் அளவுக்கு அதீத மழை கொட்டித் தீர்த்தது.
இந்த நிலையில் புயல் கரையைக் கடந்து வலுவிழக்காமல் நிலை கொண்டுள்ளது. அது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான மழை அறிவிக்கையையும் வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மற்றும் புதுச்சேரி.
ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை
மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டனம், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் காரைக்கால்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தனிமை.. ஒரு வசீகரம்!
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
ஏன் கடவுளைப் புகழ்கிறோம்.. Why We Praise the Lord?
கேரள க்ரைம் ஸ்டோரி!
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
சிவனுக்கு நெய்வேத்யமாக செய்யப்படும் திருவாதிரை களி.. எப்படிச் செய்யணும் தெரியுமா?
அமைதியான புத்தாண்டுக் கொண்டாட்டம்.. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு!
இனிய புத்தாண்டு 2026.. புத்தாண்டை சந்தோஷமாக கொண்டாட தயாரோவோம்!
Happy New year 2026: புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்குத் தயாராகும் மக்கள் + காவல்துறையினர்!
{{comments.comment}}