புரட்டிப் போடப் போகும் கனமழை .. திருவள்ளூர் மாவட்டத்துக்கு.. டிச 4ம் தேதி ரெட் அலர்ட்

Dec 02, 2023,05:58 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக  உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதனால் டிசம்பர் நான்காம் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது நாளை புயலாக உருவாகும். இந்த புயலுக்கு மிச்சாங் என பெயர் சூட்டப்படும்.




தற்போது புயல் சின்னமானது 18 கி மீ வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்கிறது. இது  சென்னையிலிருந்து 510 கிமீ கிழக்கு தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது. பின்னர் மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, டிசம்பர் 5ஆம் தேதி முற்பகல் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டனத்துக்கும் இடையே, புயல் கரையைக் கடக்கும் .அப்போது மணிக்கு 80 முதல்  90 கிமீ இடையே 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும்.


புயல் சின்னம் காரணமாக வட தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,

உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.


கனமழை எச்சரிக்கை:


டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 3ஆம் தேதி வடகடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும்,டெல்டா மாவட்டங்கள் மற்றும் திருவள்ளூர், சென்னை ,வேலூர் ,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ,கடலூர், போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.


மிக கனமழை எச்சரிக்கை:


டிசம்பர் 4 ஆம் தேதி சென்னை ,வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் ,போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் எதிர்பார்க்கலாம்.


டிசம்பர் 4ஆம் தேதி உருவாகும் மிச்சாங் புயலால்  திருவள்ளூரில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 4 ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்