புரட்டிப் போடப் போகும் கனமழை .. திருவள்ளூர் மாவட்டத்துக்கு.. டிச 4ம் தேதி ரெட் அலர்ட்

Dec 02, 2023,05:58 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக  உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதனால் டிசம்பர் நான்காம் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது நாளை புயலாக உருவாகும். இந்த புயலுக்கு மிச்சாங் என பெயர் சூட்டப்படும்.




தற்போது புயல் சின்னமானது 18 கி மீ வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்கிறது. இது  சென்னையிலிருந்து 510 கிமீ கிழக்கு தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது. பின்னர் மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, டிசம்பர் 5ஆம் தேதி முற்பகல் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டனத்துக்கும் இடையே, புயல் கரையைக் கடக்கும் .அப்போது மணிக்கு 80 முதல்  90 கிமீ இடையே 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும்.


புயல் சின்னம் காரணமாக வட தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,

உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.


கனமழை எச்சரிக்கை:


டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 3ஆம் தேதி வடகடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும்,டெல்டா மாவட்டங்கள் மற்றும் திருவள்ளூர், சென்னை ,வேலூர் ,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ,கடலூர், போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.


மிக கனமழை எச்சரிக்கை:


டிசம்பர் 4 ஆம் தேதி சென்னை ,வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் ,போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் எதிர்பார்க்கலாம்.


டிசம்பர் 4ஆம் தேதி உருவாகும் மிச்சாங் புயலால்  திருவள்ளூரில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 4 ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்