- மஞ்சுளா தேவி
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் டிசம்பர் நான்காம் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது நாளை புயலாக உருவாகும். இந்த புயலுக்கு மிச்சாங் என பெயர் சூட்டப்படும்.

தற்போது புயல் சின்னமானது 18 கி மீ வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்கிறது. இது சென்னையிலிருந்து 510 கிமீ கிழக்கு தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது. பின்னர் மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, டிசம்பர் 5ஆம் தேதி முற்பகல் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டனத்துக்கும் இடையே, புயல் கரையைக் கடக்கும் .அப்போது மணிக்கு 80 முதல் 90 கிமீ இடையே 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும்.
புயல் சின்னம் காரணமாக வட தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,
உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை:
டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 3ஆம் தேதி வடகடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும்,டெல்டா மாவட்டங்கள் மற்றும் திருவள்ளூர், சென்னை ,வேலூர் ,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ,கடலூர், போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
மிக கனமழை எச்சரிக்கை:
டிசம்பர் 4 ஆம் தேதி சென்னை ,வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் ,போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் எதிர்பார்க்கலாம்.
டிசம்பர் 4ஆம் தேதி உருவாகும் மிச்சாங் புயலால் திருவள்ளூரில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 4 ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}