- மஞ்சுளா தேவி
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக டிசம்பர் 2 ,3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வடகடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது . தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை மறுநாள் தென்மேற்கு வங்க கடலில் புயலாக வலுப்பெறக்கூடும்.

இந்த புயலுக்கு மிச்சாங் என பெயரிடப்படும். இந்த புயல் சின்னம் தற்போது சென்னையிலிருந்து 800 கிமீ தொலைவிலும் , கிழக்கே புதுச்சேரியில் இருந்து 790 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. ஏற்கனவே சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை சென்னைக்கு வடக்கே ஆந்திராவின் மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.
இன்று மழை நிலவரம்:
சென்னை ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,நாகை ,ராமநாதபுரம், திருவள்ளூர், ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழையையும், அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையையும் பெய்யக்கூடும். மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் மிக கனமழையையும் எதிர்பார்க்கலாம்.
இலங்கை கடல் பகுதியில் நிலவிவரும் கீழடுக்கு சுழற்சியை தொடர்ந்து நிலவி வருவதால் ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் தனுஷ்கோடி ராமேஸ்வரம் போன்ற கடல் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மழையின் அளவு:
அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 19 செமீ மழை பதிவாகியுள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 5.5 செமீ மழையும், தலைஞாயிறில் 5.4 செமீ மழையும், திருக்குவளையில் 4 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}