- மஞ்சுளா தேவி
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக டிசம்பர் 2 ,3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வடகடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது . தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை மறுநாள் தென்மேற்கு வங்க கடலில் புயலாக வலுப்பெறக்கூடும்.
இந்த புயலுக்கு மிச்சாங் என பெயரிடப்படும். இந்த புயல் சின்னம் தற்போது சென்னையிலிருந்து 800 கிமீ தொலைவிலும் , கிழக்கே புதுச்சேரியில் இருந்து 790 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. ஏற்கனவே சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை சென்னைக்கு வடக்கே ஆந்திராவின் மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும்.
இன்று மழை நிலவரம்:
சென்னை ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,நாகை ,ராமநாதபுரம், திருவள்ளூர், ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழையையும், அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையையும் பெய்யக்கூடும். மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் மிக கனமழையையும் எதிர்பார்க்கலாம்.
இலங்கை கடல் பகுதியில் நிலவிவரும் கீழடுக்கு சுழற்சியை தொடர்ந்து நிலவி வருவதால் ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் தனுஷ்கோடி ராமேஸ்வரம் போன்ற கடல் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மழையின் அளவு:
அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 19 செமீ மழை பதிவாகியுள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 5.5 செமீ மழையும், தலைஞாயிறில் 5.4 செமீ மழையும், திருக்குவளையில் 4 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}