சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது புயலாக அது மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் 12 மணி நேரத்தில் புயலாக இது மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நான்கு மாவட்டங்களுக்கு நாளை விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட்டும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், திருவாரூர் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. தற்போது அதை ஆரஞ்சு அலர்ட்டாக வானிலை மையம் மாற்றியுள்ளது. புயல் சின்னமானது மணிக்கு 3 கிலோமீட்டர் வேகத்தில் மிக மிக மெதுவாக தற்போது நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புயலாக வலுப்பெற்ற பிறகு 30ம் தேதியன்று ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புயல் சின்னமானது சென்னையிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. புதுச்சேரியிலிருந்து 420 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நாகையிலிருந்து 320 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
முன்னதாக தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனை தொடர்ந்து இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு இலங்கை பகுதியை நோக்கி நகர்ந்து புயலாக வலுப்பெற கூடும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் எனவும் பெயர் சூட்டப்படவுள்ளது.

இன்று காலை நிலவரப்படி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டின் நோக்கி 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நிலைமை மாற ஆரம்பித்துள்ளது. புயல் சின்னத்தின் வேகம் அடியோடு குறைந்ததற்கான காரணம் தெரியவில்லை.
இன்று காலைதான் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தற்போது அது மாறியுள்ளது. புயல் சின்னம் காரணமாக விழுப்புரம், கடலூர், நாகை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கடல் பகுதிகளில் கடல் பெரும் சீற்றத்துடன் காணப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Asha Bhosle: ஓ பட்டர்பிளை.. நீ பாடிய பாடல்களுக்கு நன்றி.. மறக்க முடியாத செண்பகமே செண்பகமே!
எங்க வீட்டு செல்லக் குட்டி.. செல்லச் சிரிப்பால் சவால்களை தாண்டி.. 3 வயதில்!
Sanju Samson Century: சேப்பாக்கத்தில் சிறப்பான சம்பவம்.. பவுலிங்கிலும் கலக்கிய சிஎஸ்கே!
Rathi's Kitchen: நாக்கு சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும்.. நார்ச் சத்து மிகுந்த துவையல்!
Thangalakshmi Short Story: உண்மை என்பது இவ்வுலகில் இல்லை
1300 அடியார்கள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகப் பயணம்!
நேரமாகி விட்டது.. சீக்கிரம் ரெடியாகி வா.. மெல்லிய பூங்காற்று.. (2)
Wonder Words: ஏன்.. எப்படி .. எதற்கு?.. விந்தையான வார்த்தைகள்!
நீங்களும் ஆகலாம்.. கலாம்.. அப்துல் கலாமின் காவியக் கவிதை!
{{comments.comment}}