சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது புயலாக அது மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் 12 மணி நேரத்தில் புயலாக இது மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நான்கு மாவட்டங்களுக்கு நாளை விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட்டும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், திருவாரூர் மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. தற்போது அதை ஆரஞ்சு அலர்ட்டாக வானிலை மையம் மாற்றியுள்ளது. புயல் சின்னமானது மணிக்கு 3 கிலோமீட்டர் வேகத்தில் மிக மிக மெதுவாக தற்போது நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புயலாக வலுப்பெற்ற பிறகு 30ம் தேதியன்று ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புயல் சின்னமானது சென்னையிலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. புதுச்சேரியிலிருந்து 420 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நாகையிலிருந்து 320 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
முன்னதாக தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனை தொடர்ந்து இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு இலங்கை பகுதியை நோக்கி நகர்ந்து புயலாக வலுப்பெற கூடும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் எனவும் பெயர் சூட்டப்படவுள்ளது.

இன்று காலை நிலவரப்படி இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டின் நோக்கி 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நிலைமை மாற ஆரம்பித்துள்ளது. புயல் சின்னத்தின் வேகம் அடியோடு குறைந்ததற்கான காரணம் தெரியவில்லை.
இன்று காலைதான் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தற்போது அது மாறியுள்ளது. புயல் சின்னம் காரணமாக விழுப்புரம், கடலூர், நாகை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கடல் பகுதிகளில் கடல் பெரும் சீற்றத்துடன் காணப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
SIR 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
திமுக எதிர்ப்பு .. இது மட்டும் போதுமா அதிமுக வெற்றி பெற.. எங்கேயே இடிக்குதே!
{{comments.comment}}