சென்னை: பத்து கட்சி பண்ருட்டி என்று மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனுக்குப் பெயர் சூட்டி அவரை விமர்சித்துள்ளார் மூத்த அதிமுக தலைவர் டி. ஜெயக்குமார்.
அதிமுக - பாஜக கூட்டணி டமால் ஆவதற்கான திரியை முதலில் பற்ற வைத்தவர் ஜெயக்குமார்தான். இவர்தான் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை இல்லை என்று அதிரடியாக முதன் முதலில் கூறியவர். அப்போது கூட பலர் இதை லேசாத்தான் எடுத்துக் கொண்டனர். பின்னர் நிஜமாகவே கூட்டணியிலிருந்து அதிமுக வெளியே வருவதாக அறிவித்தபோது டக்கென ஹீரோவாக உயர்ந்து விட்டார் ஜெயக்குமார்.
பாஜக தமிழக தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பின்னர், பாஜக-அதிமுக இடையே மோதல் வலுப்பெற்றது. குறிப்பாக அண்ணாமலை அதிமுக தலைவர்களை விமர்சித்தது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டதாக அறிவித்தது.
ஆனால் அவர்களுக்குள் சமரசம் ஏற்படுத்த பாஜக தலைமை முயன்று வருவதாக ஒரு டாக் ஓடிக் கொண்டிருக்கிறது. இதை டாக்டர் கிருஷ்ணசாமி போன்றோரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், நேற்று ஓபிஎஸ் தலைமையில் ஒரு திடீர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது குற்றச்சாட்டு அல்ல. it is a fact. அதேசமயம், அண்ணா குறித்து அண்ணாமலை கூறியது தவறானது. இருப்பினும் உள்நோக்கத்துடன் அவர் பேசியதாக நாங்கள் கருதவில்லை என்றார்.
இதற்குத்தான் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில்,
பத்துக்கட்சி பண்ருட்டி அம்மா குறித்து அண்ணாமலை பேசிய கருத்தை 'It is a fact' என சொல்கிறார்.
அடுத்தவர் பேச அமைதி காத்தார். அருகில் இருப்பவரை பேசவும் அனுமதிக்கிறார் இந்த நடிப்பின் நாயகன்.
தாயை பழிப்பதை மகிழ்வோடு தாலாட்டு கேட்பதை போல கேட்கும் சுயநலவாதி பன்னீர்செல்வம் என்று கூறியுள்ளார் ஜெயக்குமார்.
ஜெயக்குமார், பத்துக்கட்சி பண்ருட்டி என்று கூறியதை மட்டும் அதிமுகவினர் எடுத்துக் கொண்டு இப்போது கலகலக்க வைத்து வருகின்றனர் டிவிட்டரை. பண்ருட்டி ராமச்சந்திரன் இதுவரை பாமக, அதிமுக, தேமுதிக, அதிமுக, பின்னர் ஓபிஎஸ் என பல்வேறு கட்சிகள், அணிகளில் இடம் பெற்றவர் என்பதால்தான் அவரை பத்து கட்சி பண்ருட்டி என்று "அன்போடு" அழைத்துள்ளார் ஜெயக்குமார் என்று தெரிகிறது.!
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}