லக்னோ: இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியின்போது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் அம்பயரின் தீர்ப்பால் அதிருப்தி அடைந்து "F..K" என்று கோபமாக கூறியது சர்ச்சையாகியுள்ளது. வார்னர் கூறியது குறித்து இந்திய முன்னாள் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளா்.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வந்த ஆஸ்திரேலியா நேற்றுதான் தனது முதல் வெற்றியை சுவைத்தது. இலங்கைக்கு எதிராக லக்னோவில் நடந்த போட்டியில் ஆடிய ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி 43.3 ஓவர்களில் 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 35.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கின்போது தில்ஷன் மதுசங்கா பந்து வீச்சின்போது டேவிட் வார்னர் எல்பிடபிள்யூ முறையில்ஆட்டமிழந்தார். அவர் 6 பந்துகளை சந்தித்து 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். எல்பிடபிள்யூ கொடுத்ததற்கு எதிராக ஆஸ்திரேலியா டிஆர்எஸ்ஸுக்குப் போனது. அதில் அவுட் என்பது உறுதியானதால் டேவிட் வார்னர் கடுப்பாகி பெவிலியன் நோக்கி திரும்பியபோது அம்பயரை நோக்கி "F..K" என்று கோபமாக கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது கமென்டரி பாக்ஸில் இருந்த ஹர்பஜன் சிங், வார்னரின் செயலை உடனடியாக கண்டித்தார். அவர் கூறுகையில், வார்னர் பந்தை லேட்டாக அப்ரோச் செய்ததுதான் தவறு, அம்பயர் தவறு செய்யவில்லை. ஏன் வார்னர் கோபப்பட்டார் என்று தெரியவில்லை. இதில் கோபப்பட எந்தக் காரணமும் இல்லை என்றார் ஹர்பஜன் சிங்.
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
ஓடி விளையாடு பெண்ணே
என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?
செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!
தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரர்.. நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
{{comments.comment}}