லக்னோ: இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியின்போது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் அம்பயரின் தீர்ப்பால் அதிருப்தி அடைந்து "F..K" என்று கோபமாக கூறியது சர்ச்சையாகியுள்ளது. வார்னர் கூறியது குறித்து இந்திய முன்னாள் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளா்.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வந்த ஆஸ்திரேலியா நேற்றுதான் தனது முதல் வெற்றியை சுவைத்தது. இலங்கைக்கு எதிராக லக்னோவில் நடந்த போட்டியில் ஆடிய ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி 43.3 ஓவர்களில் 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 35.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கின்போது தில்ஷன் மதுசங்கா பந்து வீச்சின்போது டேவிட் வார்னர் எல்பிடபிள்யூ முறையில்ஆட்டமிழந்தார். அவர் 6 பந்துகளை சந்தித்து 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். எல்பிடபிள்யூ கொடுத்ததற்கு எதிராக ஆஸ்திரேலியா டிஆர்எஸ்ஸுக்குப் போனது. அதில் அவுட் என்பது உறுதியானதால் டேவிட் வார்னர் கடுப்பாகி பெவிலியன் நோக்கி திரும்பியபோது அம்பயரை நோக்கி "F..K" என்று கோபமாக கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது கமென்டரி பாக்ஸில் இருந்த ஹர்பஜன் சிங், வார்னரின் செயலை உடனடியாக கண்டித்தார். அவர் கூறுகையில், வார்னர் பந்தை லேட்டாக அப்ரோச் செய்ததுதான் தவறு, அம்பயர் தவறு செய்யவில்லை. ஏன் வார்னர் கோபப்பட்டார் என்று தெரியவில்லை. இதில் கோபப்பட எந்தக் காரணமும் இல்லை என்றார் ஹர்பஜன் சிங்.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}