Australia Vs Sri Lanka: பொசுக்குன்னு வார்த்தையை விட்ட வார்னர்.. வறுத்தெடுத்த ஹர்பஜன் சிங்!

Oct 17, 2023,10:25 AM IST

லக்னோ: இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பைப் போட்டியின்போது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் அம்பயரின் தீர்ப்பால் அதிருப்தி அடைந்து "F..K" என்று கோபமாக கூறியது சர்ச்சையாகியுள்ளது. வார்னர் கூறியது குறித்து இந்திய முன்னாள் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளா்.


நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வந்த ஆஸ்திரேலியா நேற்றுதான் தனது முதல் வெற்றியை சுவைத்தது. இலங்கைக்கு எதிராக லக்னோவில் நடந்த போட்டியில் ஆடிய ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய  இலங்கை அணி 43.3 ஓவர்களில் 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 35.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.




ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கின்போது தில்ஷன் மதுசங்கா பந்து வீச்சின்போது டேவிட் வார்னர் எல்பிடபிள்யூ முறையில்ஆட்டமிழந்தார். அவர் 6 பந்துகளை சந்தித்து 11 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். எல்பிடபிள்யூ கொடுத்ததற்கு எதிராக ஆஸ்திரேலியா டிஆர்எஸ்ஸுக்குப் போனது. அதில் அவுட் என்பது உறுதியானதால் டேவிட் வார்னர் கடுப்பாகி பெவிலியன் நோக்கி திரும்பியபோது அம்பயரை நோக்கி "F..K" என்று கோபமாக கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


அப்போது கமென்டரி பாக்ஸில் இருந்த ஹர்பஜன் சிங், வார்னரின் செயலை உடனடியாக கண்டித்தார். அவர் கூறுகையில், வார்னர் பந்தை லேட்டாக அப்ரோச் செய்ததுதான் தவறு, அம்பயர் தவறு செய்யவில்லை.  ஏன் வார்னர் கோபப்பட்டார் என்று தெரியவில்லை.  இதில் கோபப்பட எந்தக் காரணமும் இல்லை என்றார் ஹர்பஜன் சிங்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்