மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல்கள் வருவதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலிவுட் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக் கான். பாலிவுட்டின் பாட்ஷா, கிங் கான், கிங் ஆஃப் ரொமான்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தொலைக்காட்சி மூலமாகத் திரை துறையில் தோன்றியவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் கால்பதித்தவர் ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்.

ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான், ஜவான் ஆகிய படங்கள் ரசிகர்களின் மத்தியில் வெற்றி பெற்றதுடன் பாக்ஸ் ஆபிஸ் நல்ல வசூலையும் அள்ளி குவித்துள்ளது. பாலிவுட் திரைப்படங்களில் இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு இப்படங்கள் வெற்றி பெற்றதால் உலகளவில் ஷாருக்கானின் மதிப்பும் அதிகரித்துள்ளது. நிலவில் இடம் வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு ஷாருக்கானுக்கு தீவிர ரசிகர்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில், ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்கள் ஆதிகளவில் வந்து கொண்டுள்ளன. இதுகுறித்து போலீஸிலும் ஷாருக் கான் புகார் கொடுத்துள்ளார். ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் அதிகரித்து இருப்பதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 4 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அவர் எங்கு சென்றாலும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}