மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல்கள் வருவதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலிவுட் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக் கான். பாலிவுட்டின் பாட்ஷா, கிங் கான், கிங் ஆஃப் ரொமான்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தொலைக்காட்சி மூலமாகத் திரை துறையில் தோன்றியவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் கால்பதித்தவர் ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்.
ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான், ஜவான் ஆகிய படங்கள் ரசிகர்களின் மத்தியில் வெற்றி பெற்றதுடன் பாக்ஸ் ஆபிஸ் நல்ல வசூலையும் அள்ளி குவித்துள்ளது. பாலிவுட் திரைப்படங்களில் இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு இப்படங்கள் வெற்றி பெற்றதால் உலகளவில் ஷாருக்கானின் மதிப்பும் அதிகரித்துள்ளது. நிலவில் இடம் வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு ஷாருக்கானுக்கு தீவிர ரசிகர்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில், ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்கள் ஆதிகளவில் வந்து கொண்டுள்ளன. இதுகுறித்து போலீஸிலும் ஷாருக் கான் புகார் கொடுத்துள்ளார். ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் அதிகரித்து இருப்பதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 4 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அவர் எங்கு சென்றாலும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}