மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல்கள் வருவதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலிவுட் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக் கான். பாலிவுட்டின் பாட்ஷா, கிங் கான், கிங் ஆஃப் ரொமான்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தொலைக்காட்சி மூலமாகத் திரை துறையில் தோன்றியவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் கால்பதித்தவர் ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்.
ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான், ஜவான் ஆகிய படங்கள் ரசிகர்களின் மத்தியில் வெற்றி பெற்றதுடன் பாக்ஸ் ஆபிஸ் நல்ல வசூலையும் அள்ளி குவித்துள்ளது. பாலிவுட் திரைப்படங்களில் இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு இப்படங்கள் வெற்றி பெற்றதால் உலகளவில் ஷாருக்கானின் மதிப்பும் அதிகரித்துள்ளது. நிலவில் இடம் வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு ஷாருக்கானுக்கு தீவிர ரசிகர்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில், ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்கள் ஆதிகளவில் வந்து கொண்டுள்ளன. இதுகுறித்து போலீஸிலும் ஷாருக் கான் புகார் கொடுத்துள்ளார். ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் அதிகரித்து இருப்பதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 4 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அவர் எங்கு சென்றாலும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}