சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் ஒன்றாவது தெருவிற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயரை சூட்ட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது..
தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறந்த வேகபந்து வீச்சாளர் ஆவார்.இவர் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார். இதில் 300 டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்தி சாதனை படைத்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின் போது தனது ஓய்வை அறிவித்தார். தற்போது ஐபிஎல் போட்டிகளிலும் மட்டும் விளையாடி வருகிறார்.

அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா நாளை கோலாகலமாக ஆரம்பிக்க உள்ளது. இதற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். கடந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக கடந்த 2022 to 24 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் நிறுவனமான கேரம் பால் ஈவன்ட் அண்ட் மார்க்கெட்டிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திக் என்பவர் சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது சென்னை மேற்கு மாம்பழத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் 1வது தெருவிற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் சாலை என பெயர் சூட்ட சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கார்த்திக் என்பவரின் கோரிக்கையை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ராமகிருஷ்ணாபுரம் சாலைக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் சாலை என பெயர் சூட்ட முடிவு செய்துள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் அப்பகுதியில் தான் ரவிச்சந்திரன் அஸ்வின் வீடும் இருக்கிறது என்பது நினைவிருக்கலாம்.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}