ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. சென்னை அருகே 17ம் தேதி கரையைக் கடக்கும்

Oct 15, 2024,10:11 PM IST

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது சென்னைக்கு அருகே 17ம் தேதி கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு  மையம் இன்று இரவு வெளியிட்ட லேட்டஸ்ட் அறிவிப்பில் கூறியுள்ளதாவது:




தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நிகர்ந்து வட தமிழகம் - தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைப் பகுதியில், புதுச்சேரிக்கும் - நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17ம்தேதி அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்போது மணிக்கு 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும் மீனவர்கள் கடலுக்கு போவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்