Deepa Ravi Poem: வேறெதுவும் தேவையில்லை!

Apr 18, 2026,10:24 AM IST

- ஔவை அ.ர.தீபா ரவி


அன்பின் 

இதயமது 

அருகில் 

இருந்தால்

போதும்


ஆறுதலாய்ச்

சொற்களவை

செவி 

விழுந்தால் 

போதும்


சோகத்தில் 

தோள்

கொடுக்கும்

தோழமையது

போதும்


பாசவலை

அதிலே

சிறையிருந்தால்

அது

போதும்


நல்லவை

மட்டும் 

செய்யும்

மனமது

போதும்




தீயவர்க்கும்

தீமை

செய்யாக் 

குணமது 

போதும்


வறிய

நிலையிலும்

பிரியாத

உறவது 

போதும்


நேர்மறைச் 

சிந்தனையை

மட்டும் 

விதைப்பவர்

போதும்


புறங்கூறா

அகத்துடை 

சுற்றம் 

சூழ்ந்திருந்தால்

போதும்


வஞ்சகம்

இல்லா

வாழ்வது

என்றும் 

போதும்


(தமிழ் அருவி வழங்கும் விரைவுக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Joseph Vijay Vs Udayanidhi Stalin: சட்டசபை திமுக தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு!

news

Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!

news

CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?

news

கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!

news

CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!

news

Vijay Sarkar: இது தான் விஜய் சர்க்கார்.. 9 அமைச்சர்களுடன் உற்சாக பதவியேற்பு.. உற்சாகத்தில் தவெக!

news

Assembly Protem Speaker: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றார்!

news

MK Stalin Attacks: எடுத்த எடுப்பிலேயே பணம் இல்லைன்னு பேச ஆரம்பிக்காதீங்க விஜய்.. மு.க.ஸ்டாலின்

news

CM Vijay Speech: கஜானாவில் என்ன இருக்கோ.. முதல்ல வெள்ளை அறிக்கை.. பிறகுதான் வேலையே.. விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்