Deepa Ravi Poem: வேறெதுவும் தேவையில்லை!

Apr 18, 2026,10:24 AM IST

- ஔவை அ.ர.தீபா ரவி


அன்பின் 

இதயமது 

அருகில் 

இருந்தால்

போதும்


ஆறுதலாய்ச்

சொற்களவை

செவி 

விழுந்தால் 

போதும்


சோகத்தில் 

தோள்

கொடுக்கும்

தோழமையது

போதும்


பாசவலை

அதிலே

சிறையிருந்தால்

அது

போதும்


நல்லவை

மட்டும் 

செய்யும்

மனமது

போதும்




தீயவர்க்கும்

தீமை

செய்யாக் 

குணமது 

போதும்


வறிய

நிலையிலும்

பிரியாத

உறவது 

போதும்


நேர்மறைச் 

சிந்தனையை

மட்டும் 

விதைப்பவர்

போதும்


புறங்கூறா

அகத்துடை 

சுற்றம் 

சூழ்ந்திருந்தால்

போதும்


வஞ்சகம்

இல்லா

வாழ்வது

என்றும் 

போதும்


(தமிழ் அருவி வழங்கும் விரைவுக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்