தீபாவளிக்கு ஊருக்குப் போலாமா, சந்தோசமாக பயணிக்க இன்று முதல் 3 நாட்களுக்கு 14,086 சிறப்புபேருந்துகள்!

Oct 28, 2024,10:24 AM IST

சென்னை:   தீபாவளி பண்டிகை வருவதற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில், சொந்த ஊர் செல்வதற்காக இன்று முதல்  மூன்று நாட்களுக்கு மொத்தம் 14 ஆயிரத்து 086 பேருந்து இயக்கப்படுவதாக சென்னை போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.


தீபாவளி பண்டிகை என்றாலே மகிழ்ச்சிதான். அந்த நன்னாளில் தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து மகிழ்ச்சி பொங்க தீபாவளியை கொண்டாட அனைவரும் விரும்புவது வழக்கம். இதற்காக வெளியூரில் தங்கி படிப்பவர்களும் வேலை பார்ப்பவர்களும் இன்று முதலே சொந்த ஊருக்கு புறப்பட ஆயத்தம் ஆகிவிட்டனர்.  பொதுமக்கள் பேருந்து நிலையங்களை படையெடுத்து வருகின்றனர். 




அதிகளவில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழ்நாடு அரசு சார்பில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர டிக்கெட் முன் சேவையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை கொண்டாட இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக முழுவதும் சொந்த ஊருக்கு செல்ல இன்று முதல் மூன்று நாட்கள் வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், கூடுதலாக 700 பேருந்துகள் என மொத்தம் 14 ஆயிரத்து 086 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 


அதன்படி, மதுரை, கடலூர், புதுச்சேரி, திருச்சி, சிதம்பரம், தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூா், வந்தவாசி, போளூா், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.


அதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கு  கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூா், பெங்களூரு, திருத்தணி வழியாகவும், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக, ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 


உதவி எண்கள் அறிவிப்பு:


அரசு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் தொடர்பான ஏதேனும் சந்தேகங்களுக்கு 7845700557, 7845727920, 78457 40924 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உதவியைத்  பெறலாம்.


அரசு பேருந்துகள் குறித்து ஏதேனும்  புகார்கள் தெரிவிக்க வேண்டும் என்றால் 9445014436 என்ற எண்ணிலும், ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க 044 2474900, 26280445, 2628 1611  உள்ளிட்ட எண்களிலும்  தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்