சென்னை: தீபாவளிக்காக சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட வழக்கமான மற்றும் சிறப்புப் பேருந்துகள் மூலம் 5.25 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
சென்னையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக கோயம்பேடு ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையத்திற்கு மாற்றப்பட்டு அங்கிருந்து தற்போது இயங்கி வருகின்றன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்டபோது சின்னச் சின்ன குறைகள் இருந்தன. ஆனால் உடனுக்குடன் அவை நிவர்த்தி செய்யப்பட்டதால் தற்போது அந்தப் பேருந்து நிலையம் மக்களுக்கு சிறந்த சேவையாற்றும் நிலைக்கு உயர்ந்துள்ளது. இந்த தீபாவளிக்கு பல லட்சம் பயணிகளை சிறப்பாக கையாண்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல சவுகரியமான ஏற்பாடுகளை கிளாம்பாக்கம் பஸ் நிலைம் செய்திருந்தது.
இந்த வருட தீபாவளிக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமான 3408 பேருந்துகளுடன் கூடுதலாக 4876 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. மேலும் பஸ்களை நிறுத்தி வைப்பதர்காக வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கரசங்கால் விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
அக்டோபர் 28ம் தேதி முதல் இங்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. 28ம் தேதி மொத்தம் 1692 பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன் மூலம் 1.10 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்குப் பயணப்பட்டனர். 29ம் தேதி 3221 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. கிட்டத்தட்ட 2.40 லட்சம் பயணிகள் இதில் பயணம் செய்து சொந்த ஊர்களுக்குச் சென்றனர். 30ம் தேதி 3471 பஸ்கள் இயக்கப்பட்டன. 1.75 லட்சம் பயணிகள் பிரயாணம் செய்தனர்.
மொத்தமாக இந்த 3 நாட்களில் 8284 பேருந்துகள் மூலமாக 5.25 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதாக சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}