சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், 3 நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்து விற்றுத் தீர்ந்துள்ளன.
அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில்,சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். வழக்கமான ரயில்களின் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.இந்நிலையில், எப்படியும் சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பு வரும், அந்த ரயில்களிலாவது டிக்கெட்டு எடுத்து விட வேண்டும் என்று ஏராளமான மக்கள் காத்திருந்தனர். அந்த மக்களுக்கான அறிப்பு வெளியாகியது.

அதன்படி, சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து கன்னியாகுமரிக்கு அக்டோபர் 29ம் தேதியும், நவம்பர் 5ம் தேதியும் ஒரு சிறப்பு ரயில் (ரயில் எண் 06001) இயக்கப்படவுள்ளது. இது சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது.
கன்னியாகுமரியிலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு அக்டோபர் 30ம் தேதியும், நவம்பர் 6ம் தேதியும் சிறப்பு ரயில்கள் (ரயில் எண் 06002) இயக்கப்படும். இதேபோல சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து செங்கோட்டைக்கு அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 6 ஆகிய தேதிகளில் ஒரு ரயிலும், மறு மார்க்கத்தில் அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 7ம் தேதி இன்னொரு ரயிலும் இயக்கப்படுகிறது.
தாம்பரம் - கன்னியாகுமரி இடையே இன்னொரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது அக்டோபர் 29, நவம்பர் 5 மற்றும் 12ம் தேதிகளில் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, மறு மார்க்கத்தில் அக்டோபர் 29, நவம்பர் 5 மற்றும் 12ம் தேதிகளில் கன்னியாகுமரியிலிசிலருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிக்கெட் வாங்க மக்கள் வெகு ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் முன்பதிவு தொடங்கிய சிலநிமிடங்களிலேயே மொத்த டிக்கெட்டும் விற்று விட்டது. இப்போது வெயிட்டிங் லிஸ்ட்டுக்குப் போய் விட்டது. சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் அல்லது வெயிட்டிங் லிஸ்ட், ஆர்ஏசியில் உள்ளவர்களுக்கு தனி ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மக்களே இப்போதும் உங்களுக்கு நல்ல வாய்ப்புண்டு. அரசு ஏகப்பட்ட சிறப்புப் பேருந்துகளை தீபாவளிக்காக இயக்கவுள்ளது. எனவே அதில் பயணம் செய்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடுங்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}