மும்பை: நடிகை தீபிகா படுகோனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை அவரது கணவர் ரன்வீர் சிங் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
2013ம் ஆண்டு கோலியோன் கி ரஸ்லீலா என்ற படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் தீபிகாவுக்கும், ரன்வீருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் இந்த காதலை படு ரகசியமாகத்தான் வைத்திருந்தனர். கல்யாணம் வரை இந்த ரகசியத்தைக் கட்டிக் காத்தனர். 2018ம் ஆண்டு இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் வைத்து இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தேறியது.
இந்த நிலையில் கர்ப்பமானார் தீபிகா படுகோன். அவரை கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தார் ரன்வீர் சிங். கடந்த பிப்ரவரி மாதம்தான் தீபிகா கர்ப்பமாக உள்ள தகவலை வெளியிட்டார் ரன்வீர் சிங். சில நாட்களுக்கு முன்பு தீபிகா படுகோன், மும்பை சித்திவிநாயக் கோவிலுக்கு சாமி கும்பிட தனது குடும்பத்துடன் வந்திருந்தார். இந்த பின்னணியில் நேற்று அவர் மும்பை எச் என் ரிலையன்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். இன்று தீபிகாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் புது வீட்டுக்கு ரன்வீர் சிங் - தீபிகா தம்பதியினர் இடம் பெயரவுள்ளனர். புதிய வீட்டில்தான் தங்களது குழந்தையையும் வளர்க்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த வீடு பந்த்ராவில் உள்ளதாம். பிரமாண்டமான பங்களாவாக இதை கட்டியுள்ளனர். ஷாருக் கானின் வீட்டுக்கு அடுத்து இந்த பங்களா உள்ளது. வீடு தற்போது முழுமை அடையும் நிலையில் உள்ளதாம். அது முடிந்ததும் இந்த வீட்டுக்கு தீபிகா - ரன்வீர் சிங் இடம் பெயருவார்கள்.
2025ம் ஆண்டு முதல் மீண்டும் நடிக்கத் திட்டமிட்டிருக்கிறார் தீபிகா படுகோன். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு மேல் அவர் நடிக்க வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கல்கி 2வது பாகத்தில் அவர் நடிக்க வேண்டியுள்ளது. அந்தப் படத்தில்தான் முதலில் நடிக்கப் போகிறார் தீபிகா படுகோன். அதன் பிறகு ரோஹித் ஷெட்டியின் சிங்கம் அகெய்ன் படத்திலும் அவர் தனது கணவருடன் இணைந்து நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
பெற்றோர் ஆகியுள்ள தீபிகாவுக்கும், ரன்வீருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!
35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்
ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?
IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா
இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்
ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?
{{comments.comment}}