டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்திற்குட்பட்ட செயின்ட் ஸ்டீபன் கல்லூரிக்கும், துவாரகா பகுதியில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளிக்கும் திங்கள்கிழமை மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர்.
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் சகிதம் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் இல்லை.

இதேபோல மும்பை பங்குச் சந்தைக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. "Comrade Pinarayi Vijayan" என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து மிரட்டல் வந்துள்ளது. பங்குச் சந்தை கட்டிடத்தில் 4 RDX IED வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை பிற்பகல் 3 மணிக்கு வெடிக்கும் என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை போலீஸ் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தது. ஆனால், அங்கு எதுவும் சந்தேகப்படும்படியாகக் கிடைக்கவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மாதா ரமாபாய் அம்பேத்கர் மார்க் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 351(1)(b), 353(2), 351(3), 351(4) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகள் BNS சட்டத்தின் கீழ் வருகின்றன. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மிரட்டல் விடுத்த நபர் யார் என்று கண்டுபிடிக்க தீவிர முயற்சி நடந்து வருகிறது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}