டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்திற்குட்பட்ட செயின்ட் ஸ்டீபன் கல்லூரிக்கும், துவாரகா பகுதியில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளிக்கும் திங்கள்கிழமை மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர்.
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் சகிதம் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் இல்லை.

இதேபோல மும்பை பங்குச் சந்தைக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. "Comrade Pinarayi Vijayan" என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து மிரட்டல் வந்துள்ளது. பங்குச் சந்தை கட்டிடத்தில் 4 RDX IED வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை பிற்பகல் 3 மணிக்கு வெடிக்கும் என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை போலீஸ் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தது. ஆனால், அங்கு எதுவும் சந்தேகப்படும்படியாகக் கிடைக்கவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மாதா ரமாபாய் அம்பேத்கர் மார்க் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 351(1)(b), 353(2), 351(3), 351(4) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகள் BNS சட்டத்தின் கீழ் வருகின்றன. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மிரட்டல் விடுத்த நபர் யார் என்று கண்டுபிடிக்க தீவிர முயற்சி நடந்து வருகிறது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}