டெல்லியில் நிலநடுக்கம்.. ஹரியானா, உ.பி உள்ளிட்ட மாநிலங்களிலும் அதிர்வுகள் எதிரொலித்தன!

Jul 10, 2025,10:42 AM IST

டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் அதிர்வுகள் அண்டை மாநிலங்களான உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் இருந்தன.

ஹரியானாவின் ஜஜ்ஜர் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் சுமார் 4.4 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் பூமிக்குக் கீழே 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.


காலை 9:04 மணியளவில் நிலநடுக்கம் தாக்கியபோது, டெல்லியின் பல பகுதிகளில் மின்விசிறிகள் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்கள் ஆடியதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நொய்டா மற்றும் குருகிராமில் உள்ள அலுவலகப் பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன; கம்ப்யூட்டர்கள் தடதடவென ஆடியதாலும், மின்விசிறி, டேபிள் உள்ளிட்டவை ஆட்டம் கண்டதாலும் ஊழியர்கள் பீதியடைந்து வெளியேறினர்.




ஜஜ்ஜரில் உள்ள நிலநடுக்க மையத்தில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள மேற்கு உத்தரப் பிரதேசத்தின் மீரட் மற்றும் ஷாம்லி வரையிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.  சில விநாடிகள் வரை இந்த நிலநடுக்கமானது நீடித்ததாக தெரியவந்துள்ளது.


நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டது. மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், வெளியே ஓட படிக்கட்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது. நிலநடுக்கத்தின்போது வாகனம் ஓட்டுபவர்கள் திறந்த வெளியில் வாகனத்தை நிறுத்துமாறும் தேசிய பேரிடர் மீட்புப் படை அறிவுறுத்தியது.


இந்த நிலநடுக்கம் லேசானதாக இருந்ததால் பெரிய அளவில் எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்