சென்னை: இரட்டை இலை தொடர்பான வழக்கில் எழுந்துள்ள புகாரின் அடிப்படையில் உடனடியாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வா புகழேந்தி மனு கொடுத்துள்ளார். இந்த மனு தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பளிக்க உள்ளது.
அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வா புகழேந்தி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.ஆனால் இதுவரை தேர்தல் ஆணையம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி பன்னீர்செல்வம் ஆதரவாளர் வா புகழேந்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா, விசாரணையின்போது, அதிமுகவில் இரு அணிகள் உள்ளதா.. இரண்டு அணிகளும் ஒரு சின்னத்திற்கு உரிமை கோருகிறதா.. என கேள்வி எழுப்பினார். அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் ஆஜரான +வழக்கறிஞர் பாலாஜி வாதிடுகையில், அதிமுக ஒரே அணியாக தான் உள்ளது. யாருக்கு பெரும்பான்மை இருக்கிறதோ அவர்களுக்குத்தான் அதிமுகவின் கொடி மற்றும் சின்னம் . அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமியை தான் பொதுச்செயலாளராக நியமித்து உள்ளனர். பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கே உள்ளது என்று வாதிட்டார்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிபதி சச்சின் தத்தா பிற்பகல் தீர்ப்பளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு சாதகமாக அமையுமா அல்லது ஈபிஎஸ் க்கு சாதகமாக அமையுமா என்ற எதிர்பார்ப்புடன் இரு பிரிவினரும் காத்திருக்கின்றனர். இதில் வரும் தீர்ப்பைப் பொறுத்தே இரட்டை இலை சின்னம் யாருக்குப் போகும் அல்லது முடக்கப்படுமா என்பது தெரிய வரும்.
இதற்கிடையே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ். அதிமுக கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் இடைக்காலத் தீர்ப்பு பிறப்பித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், திங்கட்கிழமை இறுதித் தீர்ப்பளிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}