டில்லி : அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக டில்லியில் உள்ள இஸ்லாமிய மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், சிறப்பு தொழுகையும் நடத்தி உள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று (ஜனவரி 20) டில்லி நிஜாமுதீன் பசித் பகுதியில் இஸ்லாமியர்களின் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நல்ல படியாக நடைபெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்ததுடன், சிறப்பு தொழுகையும் நடத்தப்பட்டது. இந்த விழாவின் மூலம் நாட்டில் அமைதியும் ஒற்றுமையும் நிலைக்க வேண்டும் என்றும் அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு இந்து சமூகத்தினர்களுக்கு வாழ்த்துக்களையும் இஸ்லாமிய சகோதரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விழா சிறப்பாக நடைபெறுவதற்கு இந்துக்களுக்கு, ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் துணை நிற்கும் என மவுலானா நசீர் அகமது அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்த விஷயத்தில் இஸ்லாமிய சமூகத்தில் எந்த குழப்பமும் கிடையாது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்று, நடக்க போகும் விழாவிற்கு எங்களின் முழு ஆதரவையும் அளிக்கிறோம் என்றார்.
ஜனவரி 22ம் தேதியும் ராமர் கோவில் திறப்பு வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும் என்றம் அவர் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய சமூகத்தினரின் இந்த ஒத்துழைப்பிற்கு பாஜக தலைவர் ஷாஜியா இல்மி வரவேற்பு தெரிவித்ததுடன் இது ஒரு நல்ல ஆரம்பம் என்றம் தெரிவித்துள்ளார். அமைதி, வளர்ச்சி, ஒற்றுமைக்காக நாடு முழுவதும் சிறப்பு பிரார்த்தனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}