டில்லி : அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக டில்லியில் உள்ள இஸ்லாமிய மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், சிறப்பு தொழுகையும் நடத்தி உள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று (ஜனவரி 20) டில்லி நிஜாமுதீன் பசித் பகுதியில் இஸ்லாமியர்களின் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நல்ல படியாக நடைபெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்ததுடன், சிறப்பு தொழுகையும் நடத்தப்பட்டது. இந்த விழாவின் மூலம் நாட்டில் அமைதியும் ஒற்றுமையும் நிலைக்க வேண்டும் என்றும் அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு இந்து சமூகத்தினர்களுக்கு வாழ்த்துக்களையும் இஸ்லாமிய சகோதரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விழா சிறப்பாக நடைபெறுவதற்கு இந்துக்களுக்கு, ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் துணை நிற்கும் என மவுலானா நசீர் அகமது அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்த விஷயத்தில் இஸ்லாமிய சமூகத்தில் எந்த குழப்பமும் கிடையாது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்று, நடக்க போகும் விழாவிற்கு எங்களின் முழு ஆதரவையும் அளிக்கிறோம் என்றார்.
ஜனவரி 22ம் தேதியும் ராமர் கோவில் திறப்பு வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும் என்றம் அவர் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய சமூகத்தினரின் இந்த ஒத்துழைப்பிற்கு பாஜக தலைவர் ஷாஜியா இல்மி வரவேற்பு தெரிவித்ததுடன் இது ஒரு நல்ல ஆரம்பம் என்றம் தெரிவித்துள்ளார். அமைதி, வளர்ச்சி, ஒற்றுமைக்காக நாடு முழுவதும் சிறப்பு பிரார்த்தனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. மூர்த்தி நாயனார்
அழகு மயில்!
மதியொளி முகமோ!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}