டில்லி : அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக டில்லியில் உள்ள இஸ்லாமிய மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், சிறப்பு தொழுகையும் நடத்தி உள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று (ஜனவரி 20) டில்லி நிஜாமுதீன் பசித் பகுதியில் இஸ்லாமியர்களின் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நல்ல படியாக நடைபெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்ததுடன், சிறப்பு தொழுகையும் நடத்தப்பட்டது. இந்த விழாவின் மூலம் நாட்டில் அமைதியும் ஒற்றுமையும் நிலைக்க வேண்டும் என்றும் அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

ராமர் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு இந்து சமூகத்தினர்களுக்கு வாழ்த்துக்களையும் இஸ்லாமிய சகோதரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விழா சிறப்பாக நடைபெறுவதற்கு இந்துக்களுக்கு, ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் துணை நிற்கும் என மவுலானா நசீர் அகமது அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்த விஷயத்தில் இஸ்லாமிய சமூகத்தில் எந்த குழப்பமும் கிடையாது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்று, நடக்க போகும் விழாவிற்கு எங்களின் முழு ஆதரவையும் அளிக்கிறோம் என்றார்.
ஜனவரி 22ம் தேதியும் ராமர் கோவில் திறப்பு வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படும் என்றம் அவர் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய சமூகத்தினரின் இந்த ஒத்துழைப்பிற்கு பாஜக தலைவர் ஷாஜியா இல்மி வரவேற்பு தெரிவித்ததுடன் இது ஒரு நல்ல ஆரம்பம் என்றம் தெரிவித்துள்ளார். அமைதி, வளர்ச்சி, ஒற்றுமைக்காக நாடு முழுவதும் சிறப்பு பிரார்த்தனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்
சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?
'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்
ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!
எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை
சிங்காரத்தேனே தென்மதுர மானே !
நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?
பாறையும் செடியும்!
கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!
{{comments.comment}}