வெளுக்கும் வெயில்.. கோடைகால சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது.. பள்ளிக்கல்வித்துறை கண்டிப்பு

Apr 22, 2024,06:42 PM IST

சென்னை: கோடை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும்  மெட்ரிக் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ஆண்டு தேர்வுகள் முடிவுற்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுத் தேர்வு எழுதும் 10,11,12 ஆகிய வகுப்புக்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகளை பள்ளிகளில் சமீப காலங்களாக நடத்தி வருகின்றனர். இந்த சிறப்பு வகுப்புகளால் பள்ளியின் தேர்ச்சி விகிதம்  உயருகிறது. இதனால்  தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்துவதில் அதிகளவில் ஆர்வம் காண்பித்து  வருகின்றன. 




முன்னர் எல்லாம் ஒரு சில பள்ளிகளில் மட்டுமே நடைபெற்று வந்த, இந்த சிறப்பு வகுப்புகள் தற்பொழுது அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்களிடையே உளவியல் பிரச்சனை ஏற்படுவதாக புகார்களும் வரத்தொடங்கி காரணத்தால், இந்த சிறப்பு வகுப்புகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இந்த விடுமுறை காலங்களில் எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை அளித்துள்ளது.


இந்நிலையில், பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள் கோடை காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. அதனை மீறி கோடைகால சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்