சென்னை: திரைத்துறையினரின் கோரிக்கையை அடுத்து மனைகளை பயன்படுத்தும் வகையில், புதிய அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திரைத்துறை சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார்.
சென்னையை அடுத்த பையனூரில் கடந்த 2010ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட வீட்டுமனைகளில் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டாததால் மனைக்கான ஆணை ரத்தானது. திரைத்துறையினரின் கோரிக்கையை அடுத்து மனைகளை பயன்படுத்தும் வகையில் புதிய அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டது.

இது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில், திமுக அரசு கலைத்துறையில் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறது. திரை கலைஞர்களின் நலனில் முழு அக்கறையோடு அரசு செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், சென்னையை அடுத்த பையனூரில் கலந்த 2010ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை நடிகர்கள் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த உறுப்பினர்கள் பயன் பெறும் வகையில் சென்னை கேளம்பாக்கத்தை அடுத்த பையனூரில் 90 ஏக்கர் நிலத்தை ஆண்டுக்கு ரூபாய் 1000 என 99 ஆண்டுகளுக்கு கலைஞர் அவர்கள் குத்தகைக்கு கொடுத்திருந்தார். அரசு ஆணையின் படி வழங்கப்பட்ட வீட்டுமனைகளில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டாததால் மனைக்கான ஆணை ரத்தானது. திரைத்துறையினரின் கோரிக்கையை அடுத்து மனைகளை பயன்படுத்தும் வகையில் புதிய அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான ஆணையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திரைத்துறை சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட சினிமா திரைப்பட தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் பெப்சி தொழிலாளர் சங்கத்தினர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
மீண்டும் வரலாறு .. ஜூன் 18ல் ராஜ்யசபா இடைத் தேர்தல்.. தவெகவுக்கு முதல் எம்.பி. கிடைக்க வாய்ப்பு!
திமுகவிடம் கண்ணியம் இல்லை; ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்: ஆதவ் அர்ஜூனா ஆவேசம்
ஒரு புதிய வரலாறு.. முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்த விசிக, முஸ்லீம் லீக்!
சாதாரணத்தில் இருந்து அ(மிக)சாதாரணத்திற்கு… (Ordinary to Extraordinary..)
ஆஹா, உன்னைக் காண இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 8)
கோடை வெயில் ஆபத்தாகாமல் இருக்க வீட்டில் இந்த 10 தவறுகளை செய்துடாதீங்க
வைகாசி விசாகம் 2026.. முருகப் பெருமானுக்குரிய முக்கிய தினம்.. மிக மிக சிறப்பு!
தாயன்பு !
All Is Well.. சவால்களை நம்பிக்கையுடன் சந்திப்போம்!
{{comments.comment}}