திரைத் துறையினர் வைத்த கோரிக்கை.. நிறைவேற்றிய.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

Feb 21, 2025,02:34 PM IST

சென்னை: திரைத்துறையினரின் கோரிக்கையை அடுத்து மனைகளை பயன்படுத்தும் வகையில், புதிய அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திரைத்துறை சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார்.



சென்னையை அடுத்த பையனூரில் கடந்த 2010ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட வீட்டுமனைகளில் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டாததால் மனைக்கான ஆணை ரத்தானது. திரைத்துறையினரின் கோரிக்கையை அடுத்து மனைகளை பயன்படுத்தும் வகையில் புதிய அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டது.




இது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  அளித்த பேட்டியில், திமுக அரசு கலைத்துறையில் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறது. திரை கலைஞர்களின் நலனில் முழு அக்கறையோடு அரசு செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், சென்னையை அடுத்த  பையனூரில் கலந்த 2010ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை நடிகர்கள் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த உறுப்பினர்கள் பயன் பெறும் வகையில் சென்னை கேளம்பாக்கத்தை அடுத்த  பையனூரில் 90 ஏக்கர் நிலத்தை ஆண்டுக்கு ரூபாய் 1000 என 99 ஆண்டுகளுக்கு கலைஞர் அவர்கள் குத்தகைக்கு கொடுத்திருந்தார். அரசு ஆணையின் படி வழங்கப்பட்ட வீட்டுமனைகளில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டாததால் மனைக்கான ஆணை ரத்தானது. திரைத்துறையினரின்  கோரிக்கையை அடுத்து மனைகளை பயன்படுத்தும் வகையில் புதிய அரசாணை தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 


இதற்கான ஆணையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திரைத்துறை சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட சினிமா திரைப்பட தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் பெப்சி தொழிலாளர் சங்கத்தினர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!

news

கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!

news

கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள‌..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!

news

கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு

news

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை

news

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!

news

கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி

news

பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்

news

தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்