100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசு வேலை.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Oct 01, 2024,04:32 PM IST

விருதுநகர்: 3 ஆண்டுகளில் 1300 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.38 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசுப் பணி வழங்கப்பட உள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இவ்விழாவிற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வரவேற்றனர். இவ்விழாவில் விளையாட்டு போட்டிகளில் பெற்றி பெற்ற 2111 வீரர்களுக்கு ரூ.42.96 கோடி மதிப்பிலான பரிசுத் தொகையை வழங்கினார். முன்னதாக மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.45.39 கோடியில்  இலவச வீட்டுமனை பட்டாகளையும் வழங்கினார்.




இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், துணை முதல்வராக நியமித்த பிறகு சென்னைக்கு வெளியே கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி என்பதால் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. மதுரையில் கடந்த பிப்ரவரி மாதம் கலைஞர் விளையாட்டு உபகரணம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தோம். 18 மாவட்டங்களில் அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 


தென்மாவட்டம் என்றாலே வீரத்திற்கு பெயர் போனவை வீர விளையாட்டுக்கும் பெயர் போனவை.  கேலோ இந்தியா, கார் பந்தயம் உள்ளிட்டவை சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பல துறைகளில் முன்னணியில் உள்ளோம் என ஒன்றிய அரசின் நிதி ஆயோ புள்ளி விவரங்கள் தெளிவாக தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு, தொழில் முதலீடு அதிகம் உள்ள மாநிலம் என்பதை ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவிற்கே தமிழகம் தான் வழிகாட்டியாக முன்னோடியாக உள்ளது. 




யாராலும் வீழ்த்த முடியாத ஆல் ரவுண்டராக தலைவர் கலைஞர் இருந்தார். அதனால் தான் கலைஞர் பெயரில் விளையாட்டு உபகரணம் வழங்கி உள்ளோம். விருதுநகர், கோவில்பட்டியில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் உருவாகி உள்ளனர். இன்னும் உருவாகி வருகின்றனர். செஸ் விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த முகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி, ஸ்ரீநாத் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி பெருமை தேடித்தந்துள்ளனர். 


கடந்த மூன்று ஆண்டுகளில் 1300 விளையாட்டு வீரர்களுக்கு 38 கோடி ரூபாய் ஊக்க தொகையை முதல்வர் வழங்கி உள்ளார். தொடர்ச்சியாக விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று 100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசு பணி வழங்க உள்ளோம் என தெரிவித்துள்ளோம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம்.. நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி

news

வனத்துறை நடத்திய ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு.. ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா?

news

CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்

news

4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்

news

பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!

news

ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?

news

பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?

news

14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்