தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், இந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான வார்த்தைகள் மட்டுமே உள்ளன. ஆனால் மக்களுக்குத் தேவையான உருப்படியான திட்டங்கள் ஏதுமில்லை. இது வெறும் வார்த்தை ஜாலமான பட்ஜெட்டாக இருக்கிறது. 2021 தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கைக்கூட (25%) இன்னும் நிறைவேற்றவில்லை. அந்த வாக்குறுதிகள் என்ன ஆனது என்பதற்கு இந்த பட்ஜெட்டிலும் பதில் இல்லை.

தமிழகத்தின் கடன் அளவு வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. வரவுக்கும் செலவுக்கும் தொடர்பில்லாமல் நிர்வாகத் திறமையற்ற முறையில் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. மக்களுக்குப் பயன் தரும் பெரிய திட்டங்கள் ஏதுமில்லாத இந்த பட்ஜெட், தாகத்திற்குத் தண்ணீர் கிடைக்காத கானல் நீர் போன்றது. அத்திப்பழம் வெளியே அழகாக இருக்கும். உற்றுப்பார்த்தால் தான் உள்ளே இருக்கும் சொத்தை தெரியும். அப்படி தான் உள்ளது இந்த நிதிநிலை அறிக்கை.
நிதிநிலைமையை சரி செய்ய ரகுராம் ராஜன் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அதன்பின்னர் தான் கடன் தொகை அதிகரித்துள்ளது. மத்திய அரசை குற்றம் சாட்டும் நிதி அமைச்சர் மாநில அரசின் வருவாய் குறைந்தது பற்றி பேசவில்லை. வேளாண் பட்ஜெட் என்று விவசாயிகளை ஏமாற்றுகின்ற பட்ஜெட்டை போட்டு உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் இனியும் சிஎஸ்கே கோட்டை இல்லை.. அபார வெற்றியைத் தட்டிய பஞ்சாப் கிங்ஸ்!
Sarfaraz Khan: சர்பராஸ் கான் அதிரடி கேமியோ.. ஜஸ்ட் 12 பந்துகளில் பட்டையைக் கிளப்பிய 32 ரன்கள்!
Ayush Mhatre.. ஐபிஎல் வரலாற்றிலேயே.. 19 வயசுக்கு முன்னாடியே.. புதிய வரலாறு படைத்த ஆயுஷ் மாத்ரே!
Ayush Mhatre: கட்டையைப் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸை.. தூக்கி செங்குத்தாக நிறுத்திய ஆயுஷ் மாத்ரே!
பாஜக வேட்பாளர்கள்: மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி.. அண்ணாமலை போட்டியிடவில்லை!
ஸ்ரீபெரும்புதூரில் செல்வப் பெருந்தகை.. பென்னாகரத்தில் தமிழ்க்குமரன்.. காங். வேட்பாளர் பட்டியல்
மனிதனை தாண்டும் நுண்ணறிவு.. Super Intelligence மற்றும் மனிதன்–AI இணைவு (9)
இது என் கதை.. உங்களது அனுபவத்தையும் பகிருங்கள் தோழியரே!
அது யாருக்கு சொந்தம்..? (ஒரு பக்க சிறுகதை)
{{comments.comment}}