ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வால் வீட்டுக்குள் ராத்திரியில் புகுந்த துணை தாசில்தார் ஆனந்த் ரெட்டி என்பவர் கைது செய்யப்பட்டார்.
பதவி உயர்வு தொடர்பாக ஸ்மிதா சபர்வாலுடன் ஆலோசனை நடத்துவதற்காக வீட்டுக்குள் புகுந்ததாக கூறியுள்ளார் ஆனந்த் ரெட்டி. அவருக்குத் துணையாக வந்து காரில் வெளியில் காத்திருந்த ஆனந்த் ரெட்டியின் நண்பரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஸ்மிதாவின் பங்களா உள்ளது. சனிக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவம் குறித்து நேற்று டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார் ஸ்மிதா சபர்வால். இதுகுறித்து அவர் கூறுகையில், மிகவும் அபாயகரமான அனுபவத்தை நான் சந்திக்க நேரிட்டது. இரவில் ஒருவர் எனது வீட்டுக்குள் புகுந்து விட்டார். எனது சமயோஜிதத்தால் என்னைப் பாதுகாத்துக் கொண்டேன். என்னதான் உங்களது வீடு பாதுகாப்பாக இருப்பதாக நீங்கள் நினைத்தாலும், படுக்கப் போவதற்கு முன்பு கதவுகள், ஜன்னல்கள் சரியாக பூட்டப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் ஸ்மிதா.
ஸ்மிதா சபர்வால் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனந்த் ரெட்டி, மல்கஜ்கிரி மாவட்டம் மெட்சால் பகுதியில் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். பதவி உயர்வு தொடர்பாக அவர் ஐஏஎஸ் அதிகாரி வீட்டுக்கு வந்ததாக போலீஸில் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு எதற்கு ராத்திரியில் வீடு புக வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}