அஜித் என்னை ஏமாத்திட்டாரு... பரபரப்பை கிளப்பிய பிரபல தயாரிப்பாளர்

Jul 12, 2023,09:08 AM IST
சென்னை : நடிகர் அஜித்குமார் தன்னை ஏமாற்றி விட்டதாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி உள்ள பகிரங்க குற்றச்சாட்டு மீடியாக்களை மட்டுமல்ல தமிழ் சினிமா உலகையே பரபரக்க வைத்துள்ளது.

தென்னிந்திய சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித், தயாரிப்பாளர் மற்றும் சக தொழிலாளர்கள் மீது அதிக அக்கறையும், மரியாதையும் கொண்டவர் என இன்ட்ரீயில் பெயர் வாங்கியவர். தயாரிப்பாளருக்கு நஷ்டம் வந்து விடக் கூடாது என்பதால் ஒரு படத்தை முடித்த பிறகு தான் அடுத்த படத்தில் கமிட்டாகும் பழக்கம் கொண்டவர்.

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம் பெரிய பட்ஜெட் படமாக தயாராக உள்ளது. அஜித்தின் சமீபத்திய போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் அஜித் தன்னை ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் குற்றம்சாட்டி உள்ளார்.




கமல் நடித்த வேட்டையாடு விளையாடு, வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் ஆகிய படங்களை தயாரித்து பிரபலமானவர் மாணிக்கம் நாராயணன். மீடியா ஒன்றிற்கு பேட்டி அளித்த மாணிக்கம் நாராயணன், தனது பெற்றோர்களை விடுமுறைக்காக மலேசியா அனுப்ப வேண்டும் என்பதற்காக அஜித் பல வருடங்களுக்கு முன் என்னிடம் பணம் வாங்கினார். கடனாக வாங்கிய பணத்தை அவர் திருப்பி தரவேயில்லை. 

அந்த பணத்தை நான் திருப்பிக் கேட்ட போது, எனக்காக ஒரு படம் நடித்து தருவதாகவும், அந்த படத்திற்கான சம்பளத்தில் அந்த தொகையை கழித்துக் கொள்ளும் படியும் அஜித் கூறினார். ஆனால் இன்று வரை பணத்தையும் திருப்பி தரவில்லை, படமும் நடித்து தரவில்லை. அதற்கு பிறகு இத்தனை வருடங்களில் அவர் இது பற்றி பேசவும் இல்லை. அவர் தன்னை ஜென்டில்மேன் என சொல்லிக் கொள்கிறார். ஆனால் அவர் அப்படி கிடையாது. 


பல வருடங்களுக்கு முன் நானும் அஜித்தின் மனைவி ஷாலினியும் நல்ல நண்பர்கள். அவர் மிகவும் நல்லவர். அஜித்திற்கு மிக நல்ல குடும்பம் உள்ளது. அவர் ஒரு படத்திற்கு ரூ.50 கோடியும், அதற்கு மேலும் சம்பளமாக வாங்குகிறார். அப்படி இருக்கும் போது என்னை போன்றவர்களை ஏமாற்றுவதால் அவருக்கு என்ன கிடைக்க போகிறது. தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் போன்றவர்கள் அஜித்தை வைத்து படம் தயாரித்து பணத்தை இழந்துள்ளனர். ஆனால் அவர் அவர்களுக்கு எந்த உதவியும் செய்தது கிடையாது என தெரிவித்துள்ளார்.

செவன்த் சேனல் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்தான் நாராயணன். இவர் புதிய தென்றல், கூலி, மாண்புமிகு மாணவன், சீனு, வேட்டையாடு விளையாடு, இந்திரலோகத்தில் நா அழகப்பன், முன்தினம் பார்த்தானே, வித்தகன் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இவரது செவன்த் சானல் நிறுவனம் டிவி சீரியல்களையும் கூட தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்