"கொளுத்தும் வெயில்".. என்ன இப்பவே பயங்கரமா இருக்கா.. இனிதான் டெரரா இருக்குமாம்!

Mar 01, 2023,01:29 PM IST
புதுடில்லி : இந்தியாவில் 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் மிக கடுமையான வெப்பம் பதிவாகி உள்ளது. இனி இன்னும் பயங்கரமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவல் பீதியை கிளப்பி உள்ளது.



பிப்ரவரி மாத நிறைவடைந்து விட்டதால் அந்த மாதத்தில் பதிவான வெப்ப நிலை பற்றிய தகவலை இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு, கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே துவங்கி விடும். மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.




வழக்கத்தை விட இந்த ஆண்டு பனிப்பொழிவு, இரவு நேரங்களில் கடும் குளிர் இருந்து வந்தது. அப்போதே இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக இருக்கும் என மக்கள் பேச துவங்கி விட்டனர். ஆனால் மக்கள் நினைத்ததை விட இந்த ஆண்டு கோடை காலம் மிக கொடுமையாக இருக்கும் என இந்திய வானிலை மையமே கூறி இருப்பதால் வியாபாரிகள், வெளியில் சென்று வேலை செய்பவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் பீதி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

அதிகம் பார்க்கும் செய்திகள்