"கொளுத்தும் வெயில்".. என்ன இப்பவே பயங்கரமா இருக்கா.. இனிதான் டெரரா இருக்குமாம்!

Mar 01, 2023,01:29 PM IST
புதுடில்லி : இந்தியாவில் 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் மிக கடுமையான வெப்பம் பதிவாகி உள்ளது. இனி இன்னும் பயங்கரமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவல் பீதியை கிளப்பி உள்ளது.



பிப்ரவரி மாத நிறைவடைந்து விட்டதால் அந்த மாதத்தில் பதிவான வெப்ப நிலை பற்றிய தகவலை இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு, கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே துவங்கி விடும். மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.




வழக்கத்தை விட இந்த ஆண்டு பனிப்பொழிவு, இரவு நேரங்களில் கடும் குளிர் இருந்து வந்தது. அப்போதே இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக இருக்கும் என மக்கள் பேச துவங்கி விட்டனர். ஆனால் மக்கள் நினைத்ததை விட இந்த ஆண்டு கோடை காலம் மிக கொடுமையாக இருக்கும் என இந்திய வானிலை மையமே கூறி இருப்பதால் வியாபாரிகள், வெளியில் சென்று வேலை செய்பவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் பீதி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்