திடீர் உடல்நலக்குறைவு... நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி

Feb 22, 2023,02:46 PM IST
சென்னை : முன்னணி நடிகரான நடிகர் பிரபு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



திடீரென ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக நடிகர் பிரபு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல் கட்டமாக அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு சிறுநீரகத்தில் கல் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரபுவுக்கு யூரிடெரோஸ்கோபி லேசர் முறையில் அறுவை சிகிச்சை நேற்று செய்யப்பட்டது. அதில் அவரது சிறுநீரகத்தில் இருந்த கற்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டு விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 



லேசர் அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரபு, பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும், வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஓய்விற்கு பிறகு ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என சொல்லப்படுகிறது. பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக பல படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகனான பிரபு, 1980 களில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்த பிரபு இதுவரை 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் பிரபு நடித்துள்ளார். ஆரம்பத்தில் ஹீரோவாக மட்டும் நடித்து வந்த பிரபு, தற்போது சப்போர்டிங் ரோல்களிலும் நடித்து வருகிறார். 

கடைசியாக விஜய் நடித்த வாரிசு படத்தில் பிரபு நடித்திருந்தார். இது பிரபு - விஜய் இணைந்து நடிக்கும் மூன்றாவது படமாகும். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கேரக்டரில் பிரபு நடித்திருந்தார். தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் பிரபு நடித்து வருகிறார்.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்