மதுரை: ஜனவரி 24ஆம் தேதி மதுரை அலங்காநல்லூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் புதிய அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முன்பதிவு செய்துள்ள காளைகள் மற்றும் காளையர்கள் விவரங்கள் வெளியாகி உள்ளது.
இதில் அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க 9,312 காளைகளும், 3,669 காளையர்களும் முன்பதிவு செய்துள்ளனர்.
மதுரை அலங்காநல்லூரில், உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெற மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அலங்காநல்லூர் மேங்கிப்பட்டி கீழக்கரையில் 44 கோடி ரூபாய் செலவில்,மிகப் பிரம்மாண்டமான அதிநவீன வசதியுடன் கூடிய ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்கப்பட்டது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டது.
இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் புதிய அரங்கத்தை வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுஉள்ளார். இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழி, மாடு பிடி வீரர்கள் செல்லும் இடம், அவசரக்கால வழி, உரிய பாதுகாப்பு தடுப்புகளும் அரங்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய அரங்கத்தில் திறப்பு விழா கொண்டாட்டமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய அரங்கத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கு பெற காளைகள் மற்றும் காளையர்கள் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த போட்டியில் பங்கு பெற பல்வேறு நிபந்தனைகளும் வரையறுக்க பட்டிருந்தது .இதனை ஏற்ற மாடுபிடி வீரர்களும் மற்றும் காளை உரிமையாளர்கள் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.இந்த முன்பதிவுக்கான விவரம் தற்போது வெளியாகி உள்ளன.
இதன்படி கீழக்கரை ஜல்லிக்கட்டு பங்கேற்க 9,312 காளைகளும் 3,669 காளையர்களும் பதிவு செய்துள்ளனர்.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}