மதுரை: ஜனவரி 24ஆம் தேதி மதுரை அலங்காநல்லூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் புதிய அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முன்பதிவு செய்துள்ள காளைகள் மற்றும் காளையர்கள் விவரங்கள் வெளியாகி உள்ளது.
இதில் அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க 9,312 காளைகளும், 3,669 காளையர்களும் முன்பதிவு செய்துள்ளனர்.
மதுரை அலங்காநல்லூரில், உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெற மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்படும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அலங்காநல்லூர் மேங்கிப்பட்டி கீழக்கரையில் 44 கோடி ரூபாய் செலவில்,மிகப் பிரம்மாண்டமான அதிநவீன வசதியுடன் கூடிய ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்கப்பட்டது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டது.

இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் புதிய அரங்கத்தை வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுஉள்ளார். இதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழி, மாடு பிடி வீரர்கள் செல்லும் இடம், அவசரக்கால வழி, உரிய பாதுகாப்பு தடுப்புகளும் அரங்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய அரங்கத்தில் திறப்பு விழா கொண்டாட்டமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய அரங்கத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கு பெற காளைகள் மற்றும் காளையர்கள் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த போட்டியில் பங்கு பெற பல்வேறு நிபந்தனைகளும் வரையறுக்க பட்டிருந்தது .இதனை ஏற்ற மாடுபிடி வீரர்களும் மற்றும் காளை உரிமையாளர்கள் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.இந்த முன்பதிவுக்கான விவரம் தற்போது வெளியாகி உள்ளன.
இதன்படி கீழக்கரை ஜல்லிக்கட்டு பங்கேற்க 9,312 காளைகளும் 3,669 காளையர்களும் பதிவு செய்துள்ளனர்.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}