திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனைகள்.. யார் யாருக்கு என்னென்ன தண்டனை?.. முழு விவரம்!

May 13, 2025,04:58 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் குற்றவாளிகளின் தண்டனை குறித்த விபரங்களை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.


பொள்ளாச்சி வழக்கில் ஆறு வருடங்களுக்குப் பிறகு இன்று காலை கோவை மகளிர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரும் குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் தண்டனை விவரங்கள் பிற்பகலில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது.


அதன்படி, பொள்ளாச்சி வழக்கு தொடர்பாக தண்டனை விபரங்களை அறிவித்துள்ளது கோவை மகளிர் நீதிமன்றம். அதில் 


1.குற்றம் சாட்டப்பட்ட சபரி ராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணி, பாபு, ஹரோன் பாலு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 போருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 


2.பாதிக்கப்பட்ட 7 பெண்களுக்கும் மொத்தமாக 85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஒவ்வொரு பெண்களுக்கும் தலா 10 முதல் 15 லட்சம் வரை இழப்பீடாக வழங்க மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.


3.அதேபோல் குற்றவாளிகளுக்கு விதித்த அபராத தொகையையும் வசூலித்து பாதுகாக்கப்பட்ட பெண்களுக்கே பிரித்து தர ஆணை பிறப்பித்துள்ளது. 


4.குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரின் மீதும் வலுவான ஆதாரங்கள் இருப்பதால், அவர்கள் மேல் முறையீடு செய்தாலும் குற்றவாளிகளுக்கு விரிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படும்.


குற்றம் சாட்டப்பட்ட 9 பேரின் ஆயுள் தண்டனை விவரங்கள்: 




ஏ1 சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனைகள் 


ஏ2 திருநாவுக்கரசுக்கு அதிகபட்சமாக தலா 5 ஆயுள் தண்டனைகள்


ஏ3 சதீஷுக்கு மூன்று ஆயுள் தண்டனைகள் 


ஏ4 வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனைகள்


ஏ5 மணி என்ற மணிவண்ணனுக்கு ஐந்து ஆயுள் தண்டனைகள்


ஏ6 பாபுவுக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை


ஏ7 அருண் பாலுக்கு மூன்று ஆயுள் தண்டனைகள் 


ஏ8 அருளானந்திற்கு ஒரு ஆயுள் தண்டனை 


ஏ9 அருண்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனை 


பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம்: 


பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட ஏழு பெண்களுக்கும் மொத்தமாக 85 லட்சம் நிவாரணம் நிவாரணம் வழங்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண் A-க்கு ரூ‌. 2 லட்சம், B-க்கு ரூ.15 லட்சம் , C மற்றும் D -க்கு தலா ரூ. 10 லட்சம், E-க்கு ரூ.8 லட்சம், F- க்கு ரூ.15 லட்சம், H- க்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க  ஆணை பிறப்பித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்

news

குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்

news

அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?

news

கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

news

தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்