சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசேகருக்கு, ஆயுள் தண்டனை மற்றும் 90 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரனை கைது செய்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் ஆளும் கட்சிக்கு தொடர்புடையவர் என கூறி இந்த வழக்கு சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, கடந்த மார்ச் மாதம் முதல் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 75 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவி உட்பட 29 பேர் வாக்குமூலம் அளித்தனர்.
இதனையடுத்து இருதரப்பு வாதங்களையும் விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம் கடந்த மே 28ஆம் தேதி ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளித்திருந்தது. மேலும் ஜூன் இரண்டாம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னை மகளிர் நீதிமன்ற அறிவிப்பின்படி, இன்று(ஜூன் 2) அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி வழக்கில் தண்டனை விபரங்கள் வெளியிட்டுள்ளது. அதன்படி,
குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனையுடன், ரூ.90,000 அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
குற்றவாளி ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் 11 குற்றங்களுக்கும் தனித்தனியாக தண்டனை விபரங்களை நீதிபதி அறிவித்துள்ளார்.
அதன்படி, கொலை மிரட்டல் விடுத்தலுக்கு 7ஆண்டுகள் மற்றும் ரூபாய் 25 ஆயிரம் அபதாரம்
பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அளித்தலுக்கு 3 ஆண்டுகள் மற்றும் 10,000 அபதாரம்
தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதலுக்கு மூன்று ஆண்டுகள் மற்றும் 10,000 அபதாரம்
விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல்-3 மாதங்கள்,
சட்டவிரோதமாக தடுத்து நிறுத்தல்- 1 மாதம்,
உடலில் காயத்தை ஏற்படுத்துதல்-ஒரு ஆண்டு,
பாலின ரீதியான தாக்குதல்- மூன்று ஆண்டுகள்
கடுமையான தாக்குதல் ஏழு ஆண்டுகள் மற்றும் ரூ.10,000அபதாரம்,
பாலியல் வன்கொடுமைக்கு 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை மற்றும் 25 ஆயிரம் அபதாரம் என
மொத்தம் 90 ஆயிரம் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது.
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}