அண்ணா பிறந்த நாள் பேச்சுப் போட்டி.. சூப்பராக பேசி பிரைஸ் அடித்த கனிஷ்கா.. கலெக்டர் கொடுத்த பரிசு!

Oct 16, 2024,03:42 PM IST

சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகப் பள்ளி மாணவி மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார். மாணவிக்கு பள்ளி சார்பாக வாழ்த்தும் பாராட்டும் வழங்கப்பட்டது.


தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசக நடுநிலைப் பள்ளியில் படித்து வருபவர் மாணவி மா.கனிஷ்கா. இவரது தந்தை தினக்கூலி. தாயாரும் தினக்கூலி. ஆனால் தனது குடும்பத்தின் ஏழ்மையையும் பொருட்படுத்தாமல் மாணவி விடாமுயற்சியுடன் தனது தனித்திறமையை வெளிப்படுத்தி, ஆசிரியர்களின் முயற்சியால், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டார். 




இதில் கலந்துகொண்ட மாணவி மா.கனிஷ்கா மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து வெற்றி பெற்றார். இதற்காக மாணவிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ரூபாய் 2000 பரிசுக்கான காசோலையையும் பாராட்டு சான்றிதழையும் வழங்கி சிறப்பித்தார். அப்போது இவர்களுடன் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமியும் உடன் இருந்தார். 


மாவட்ட அளவில் உயர்நிலை, மேல்நிலை, நடுநிலை பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என பலர் பங்கேற்ற இப்போட்டியில் தேவகோட்டை பள்ளியை சேர்ந்த மாணவி கனிஷ்காவும் கலந்து கொண்டு வெற்றி பெற்று, சிறப்பு பரிசினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனை தொடர்ந்து  பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம், ஆசிரியர்கள் முத்துலட்சுமி, முத்துமீனாள், ஸ்ரீதர், மற்றும் பெற்றோர்கள் மாணவியை வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

news

அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்