சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகப் பள்ளி மாணவி மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார். மாணவிக்கு பள்ளி சார்பாக வாழ்த்தும் பாராட்டும் வழங்கப்பட்டது.
தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசக நடுநிலைப் பள்ளியில் படித்து வருபவர் மாணவி மா.கனிஷ்கா. இவரது தந்தை தினக்கூலி. தாயாரும் தினக்கூலி. ஆனால் தனது குடும்பத்தின் ஏழ்மையையும் பொருட்படுத்தாமல் மாணவி விடாமுயற்சியுடன் தனது தனித்திறமையை வெளிப்படுத்தி, ஆசிரியர்களின் முயற்சியால், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டார்.

இதில் கலந்துகொண்ட மாணவி மா.கனிஷ்கா மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து வெற்றி பெற்றார். இதற்காக மாணவிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ரூபாய் 2000 பரிசுக்கான காசோலையையும் பாராட்டு சான்றிதழையும் வழங்கி சிறப்பித்தார். அப்போது இவர்களுடன் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமியும் உடன் இருந்தார்.
மாவட்ட அளவில் உயர்நிலை, மேல்நிலை, நடுநிலை பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என பலர் பங்கேற்ற இப்போட்டியில் தேவகோட்டை பள்ளியை சேர்ந்த மாணவி கனிஷ்காவும் கலந்து கொண்டு வெற்றி பெற்று, சிறப்பு பரிசினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம், ஆசிரியர்கள் முத்துலட்சுமி, முத்துமீனாள், ஸ்ரீதர், மற்றும் பெற்றோர்கள் மாணவியை வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}