சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகப் பள்ளி மாணவி மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார். மாணவிக்கு பள்ளி சார்பாக வாழ்த்தும் பாராட்டும் வழங்கப்பட்டது.
தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசக நடுநிலைப் பள்ளியில் படித்து வருபவர் மாணவி மா.கனிஷ்கா. இவரது தந்தை தினக்கூலி. தாயாரும் தினக்கூலி. ஆனால் தனது குடும்பத்தின் ஏழ்மையையும் பொருட்படுத்தாமல் மாணவி விடாமுயற்சியுடன் தனது தனித்திறமையை வெளிப்படுத்தி, ஆசிரியர்களின் முயற்சியால், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டார்.
இதில் கலந்துகொண்ட மாணவி மா.கனிஷ்கா மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து வெற்றி பெற்றார். இதற்காக மாணவிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ரூபாய் 2000 பரிசுக்கான காசோலையையும் பாராட்டு சான்றிதழையும் வழங்கி சிறப்பித்தார். அப்போது இவர்களுடன் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமியும் உடன் இருந்தார்.
மாவட்ட அளவில் உயர்நிலை, மேல்நிலை, நடுநிலை பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என பலர் பங்கேற்ற இப்போட்டியில் தேவகோட்டை பள்ளியை சேர்ந்த மாணவி கனிஷ்காவும் கலந்து கொண்டு வெற்றி பெற்று, சிறப்பு பரிசினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம், ஆசிரியர்கள் முத்துலட்சுமி, முத்துமீனாள், ஸ்ரீதர், மற்றும் பெற்றோர்கள் மாணவியை வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}