சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகப் பள்ளி மாணவி மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளார். மாணவிக்கு பள்ளி சார்பாக வாழ்த்தும் பாராட்டும் வழங்கப்பட்டது.
தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசக நடுநிலைப் பள்ளியில் படித்து வருபவர் மாணவி மா.கனிஷ்கா. இவரது தந்தை தினக்கூலி. தாயாரும் தினக்கூலி. ஆனால் தனது குடும்பத்தின் ஏழ்மையையும் பொருட்படுத்தாமல் மாணவி விடாமுயற்சியுடன் தனது தனித்திறமையை வெளிப்படுத்தி, ஆசிரியர்களின் முயற்சியால், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டார்.
இதில் கலந்துகொண்ட மாணவி மா.கனிஷ்கா மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து வெற்றி பெற்றார். இதற்காக மாணவிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ரூபாய் 2000 பரிசுக்கான காசோலையையும் பாராட்டு சான்றிதழையும் வழங்கி சிறப்பித்தார். அப்போது இவர்களுடன் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் சீதாலட்சுமியும் உடன் இருந்தார்.
மாவட்ட அளவில் உயர்நிலை, மேல்நிலை, நடுநிலை பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என பலர் பங்கேற்ற இப்போட்டியில் தேவகோட்டை பள்ளியை சேர்ந்த மாணவி கனிஷ்காவும் கலந்து கொண்டு வெற்றி பெற்று, சிறப்பு பரிசினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம், ஆசிரியர்கள் முத்துலட்சுமி, முத்துமீனாள், ஸ்ரீதர், மற்றும் பெற்றோர்கள் மாணவியை வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}