சென்னை: தனுஷ் இயக்கத்தில் உருவாகும் இட்லி கடை திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ராயன் பட வெற்றிக்கு பிறகு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய படங்களை இயக்கி வருகிறார் தனுஷ். இந்த இரண்டு படங்களில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் வருகிற டிசம்பர் மாதத்தில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் இளம் தலைமுறையினரின் காதலைப் பேசும் படமாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் இட்லி கடை. இது தனுஷின் 52வது படமாகும். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தனுஷ்சுடன் மீண்டும் இப்படத்தின் மூலம் ஜோடி சேர்கிறார் நித்யாமேனன். இந்த படத்தில் அருண் விஜய், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
முதற்கட்ட படப்பிடிப்பு தேனி பகுதியில் நடந்து வருவதாகவும், அதனை தொடர்ந்து 2ம் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், இந்த படம் குறித்த ஆர்வத்தையும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட் நாளை வெளியாக உள்ளதாக நடிகர் தனுஷ் தெரிவித்திருந்தார். அதன்படி, இப்படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளதாக இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!
May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'
உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!
ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!
RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்
ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)
Workers’ Day – A Note of Gratitude.. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பின் மதிப்பும்!
Dr Thangalakshmi Poem on May day: உழைப்பின் உன்னத தினம்!
{{comments.comment}}