சென்னை: தனுஷ் இயக்கத்தில் உருவாகும் இட்லி கடை திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ராயன் பட வெற்றிக்கு பிறகு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய படங்களை இயக்கி வருகிறார் தனுஷ். இந்த இரண்டு படங்களில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் வருகிற டிசம்பர் மாதத்தில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் இளம் தலைமுறையினரின் காதலைப் பேசும் படமாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் இட்லி கடை. இது தனுஷின் 52வது படமாகும். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தனுஷ்சுடன் மீண்டும் இப்படத்தின் மூலம் ஜோடி சேர்கிறார் நித்யாமேனன். இந்த படத்தில் அருண் விஜய், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
முதற்கட்ட படப்பிடிப்பு தேனி பகுதியில் நடந்து வருவதாகவும், அதனை தொடர்ந்து 2ம் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், இந்த படம் குறித்த ஆர்வத்தையும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட் நாளை வெளியாக உள்ளதாக நடிகர் தனுஷ் தெரிவித்திருந்தார். அதன்படி, இப்படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளதாக இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வாயில் வடை சுடும் அரசு இது அல்ல... சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு: முதல்வர் முக ஸ்டாலின்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசின் 8 திட்டங்கள் குறித்து அறிவிப்பு: முதல்வர் முக ஸ்டாலின்
பாமக.,வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்...அன்புமணி அறிவிப்பு...என்ன செய்ய போகிறார் ராமதாஸ்?
ராஜ்ய சபா சீட் கொடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட கதை திருட்டு புகாரில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சம வேலைக்கு சம ஊதியம்: போராடிய ஆசிரியர்கள் மீது அடக்குமுறை: அண்ணாமலை கண்டனம்!
ஜனநாயகன் இசை வெளியீட்டுக்காக மலேசியா புறப்பட்டார் விஜய்
போராட்டத்தில் திடீர் பரபரப்பு... மயங்கி விழுந்த ஆசிரியை... பதற்றத்தில் போராட்டக் களம்!
கரை தேடி வந்து உயிர்களை உள்வாங்கிய தினம்...!
{{comments.comment}}