சென்னை: தனுஷ் இயக்கத்தில் உருவாகும் இட்லி கடை திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ராயன் பட வெற்றிக்கு பிறகு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய படங்களை இயக்கி வருகிறார் தனுஷ். இந்த இரண்டு படங்களில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் வருகிற டிசம்பர் மாதத்தில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் இளம் தலைமுறையினரின் காதலைப் பேசும் படமாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து தனுஷ் இயக்கி நடித்து வரும் படம் இட்லி கடை. இது தனுஷின் 52வது படமாகும். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தனுஷ்சுடன் மீண்டும் இப்படத்தின் மூலம் ஜோடி சேர்கிறார் நித்யாமேனன். இந்த படத்தில் அருண் விஜய், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
முதற்கட்ட படப்பிடிப்பு தேனி பகுதியில் நடந்து வருவதாகவும், அதனை தொடர்ந்து 2ம் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், இந்த படம் குறித்த ஆர்வத்தையும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட் நாளை வெளியாக உள்ளதாக நடிகர் தனுஷ் தெரிவித்திருந்தார். அதன்படி, இப்படத்தின் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளதாக இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Banana.. வாழைப் பழத்தை எப்படி.. எப்போது.. எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?
தென்னையை வச்சா இளநீரு பிள்ளையை பெத்தா கண்ணீரு.. ஏன் அப்படி சொன்னாங்க தெரியுமா?
Monday Motivation.. வைராக்கியம் வாழவைக்கும்.. பொறாமை புரளி பேசவைக்கும்.. கோபம் உண்மையை உரைக்கும்!
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது போல.. பழமொழியும் உண்மை பொருளும்!
சுவையான சூப்பரான கொத்தமல்லி தொக்கு ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் பண்ணுங்க!
ஏகாம்பரநாதர் கோவிலில் கும்பாபிஷேகம்.. பக்தி வெள்ளத்தில் மூழ்கிய கோவில் நகரம் காஞ்சிபுரம்!
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
{{comments.comment}}