தனுஷ்கோடி மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை ஆமைகள்.. என்ன செய்தார்கள் தெரியுமா

Dec 03, 2025,02:05 PM IST

- க. சுமதி


தனுஷ்கோடி: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியைச் சேர்ந்த மீனவர்கள் வலையில் அரிய வகை ஆமைகள் சிக்கின. ஆனால் அதை மீண்டும் கடலிலேயே விட்டு விட்டனர் மீனவர்கள்.


தனுஷ்கோடி, மண்டபம், பாம்பன், தங்கச்சி மடம் போன்ற கடற் பகுதிகளை விட்டு டிட்வா புயல் சென்னையை நோக்கி நகர்ந்ததால் கடல் இயல்பு நிலையை அடைந்தது. இதையடுத்து நான்கு நாட்களுக்கு பிறகு இன்று மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.


இப்பகுதி மீனவர்கள் வலைகளில் அவ்வப்போது அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் சிக்குவதுண்டு. அதை அவர்கள் கரைக்குக் கொண்டு வர மாட்டார்கள். விற்கவும் மாட்டார்கள். மாறாக, அவ்வாறு கிடைக்கும் உயிரினங்களை மீனவர்கள் மீண்டும் கடலிலேயே திருப்பி விட்டுவிடுவர்.




அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி மீனவர்கள் வலையில், மன்னார் வளைகுடா கடற்பகுதியில் வாழும் அரிய வகை உயிரினமான நான்கு சித்தாமைகள் உயிருடன் சிக்கின. உயிருடன் சிக்கிய ஆமைகளை மீட்டெடுத்து முதலுதவி செய்து பத்திரமாக மீண்டும் கடலிலேயே விட்டனர் அப்பகுதி மீனவர்கள். 


இதனை மீனவர்கள் காணொளியாக சமூக வலைத்தளங்களின் பதிவிட்டதை அடுத்து வனத்துறையினரும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


(க.சுமதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் ஒரு சுனாமி.. தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு.. திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

news

ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை நாளை வருமா.. முதல்வர் விஜய் விளக்கம்

news

Tasmac: 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யக் கூடாது.. ஸ்ட்ரிக்ட் உத்தரவு

news

3 திருமணங்கள்.. எல்லாமே தோல்வி.. வாழ்க்கை முடிந்துவிடவில்லை.. மீரா வாசுதேவனின் புதிய தொடக்கம்

news

கேரளத்தின் புதிய முதலமைச்சராகிறார் வி.டி. சதீசன்.. காங்கிரஸ் அறிவிப்பு

news

கூட்டணிக் கட்சியினருக்கு மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.. மு.க.ஸ்டாலின்

news

எட்டி எட்டிப் பார்த்தான்.. எட்ட நின்று பார்த்தான்.. புடுச்சுப்போச்சு!

news

மணாளனின் மாண்புகள்!

news

Proverbs: அரைக் காசை ஆயிரம் பொன்னாக்கியவளும் பொண்டாட்டி..

அதிகம் பார்க்கும் செய்திகள்