மும்பை: முன்னணி நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் அவரை வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர்.
மும்பை, ப்ரீச்கேண்டி மருத்துவமனை டாக்டர் பிரதீத் சாம்தானி இது குறித்து கூறுகையில், "தர்மேந்திரா காலை 7.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினர் அவரை வீட்டிலேயே சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளதால், அவர் வீட்டிலேயே சிகிச்சை பெறுவார்" என்று தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக தர்மேந்திரா அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை குறித்து தவறான செய்திகள் பரவிய நிலையில், அவரது மகள் ஈஷா தியோல் மற்றும் மனைவி ஹேமாமாலினி ஆகியோர் அதனை மறுத்தனர். ஈஷா தியோல் கூறுகையில், "என் தந்தை நலமாக இருக்கிறார், குணமடைந்து வருகிறார். அப்பாவின் விரைவான குணமடைதலுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்தார்.
தர்மேந்திராவின் மகன் சன்னி தியோலின் குழுவினரும் ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில், "சார் சிகிச்சை பெற்று நலமடைந்து வருகிறார். அவரது நல்ல ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்" என்று அதில் கூறப்பட்டிருந்தது. இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
காலபைரவர் ஜெயந்தி .. தேய்பிறை அஷ்டமி அல்லது காலாஷ்டமி தினம்.. பைரவர் வழிபாடு சிறப்பு!
கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறேன்.. அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கியது... இன்று சவரனுக்கு ரூ.800 குறைவு!
தங்கம் விலை உயர்வு: 2026ல் உலகப் பொருளாதாரம் சரியுமா.. பாபா வாங்காவின் கணிப்பு என்ன?
2026ம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை.. பிளான் பண்ணி Fun பண்ணிக்கோங்க!
திடீரென மயங்கி விழுந்த நடிகர் கோவிந்தா.. மும்பை மருத்துவமனையில் அனுமதி
தர்மேந்திரா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டிலேயே வைத்தியம் பார்க்க குடும்பத்தினர் முடிவு
பெங்களூரிலிருந்து வெளியேறுகிறது ஆர்.சி.பி.. சின்னச்சாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் கிடையாது?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 12, 2025... இன்று நல்ல காலம் பிறக்க போகும் ராசிகள்
{{comments.comment}}