சென்னை: இயக்குநரும், நடிகருமான பார்த்திபனின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்த்திபன் ஒரு புதுமைப் பித்தன், புதுமை விரும்பி.. எதையும் வேறு மாதிரியாகத்தான் பார்ப்பார்.. ஒரு மாதிரியாக இருந்தாலும் கூட அது வேற லெவலில்தான் இருக்கும். அப்படிப்பட்ட சிந்தனையாளர், படைப்பாளி பார்த்திபன்.
இப்போதும் ஒரு படைப்பை பிரசவிக்கும் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்.. ஆனால் இந்த முறை சஸ்பென்ஸை கொஞ்சம் கூடுதலாகவே வைத்துள்ளார். அதுதான் பல்ஸை எகிற வைப்பதாக உள்ளது.
சமீபத்தில் தனது புதிய படம் குறித்த அறிவிப்பை வித்தியாசமாக டிவீட் செய்திருந்தார். அதில், Good morning friends பெயரை அறிவிக்காமலே படத்தை முடித்து விட்டேன். பெயர் வரும்படியும் வரும்படி தரும்படியும்
பிள்ளைகளின்+ பெற்றோரின் மனதை தொடும்படியும் விரைவில்….. என்று கூறியிருந்தார்.
இதனால் அவர் என்ன படம் செய்யப் போகிறார்.. அது எப்படிப்பட்ட கதை என்பது சுவாரஸ்யத்தைக் கூட்டியது. பெற்றோர், பிள்ளைகள் என்று கூறியிருப்பதால் ஏதாவது கரன்ட் யூத் டிரன்டிங்கை வைத்து கதையைப் பின்னியிருப்பாரோ என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில், நான் படம் (script-ல்) பார்த்த பின் தான், அதை உங்களுக்குக் காட்ட படமாக்கப் போவேன்.அப்படி படமாக்கியதை திருப்தியுடன் எடிட் செய்துக் கொண்டிருக்கிறேன். புத்தம் புதிய திரில்லராக உருவாகிறது. பார்ப்போம் விரைவில்!!!! Good night என்று கூறி விட்டுப் போயுள்ளார். இதைப் பார்த்தால் இன்னும் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.
பிள்ளைகள் + பெற்றோர்கள் + திரில்லர்.. அப்படின்னா அந்த மாதிரிக் கதையாக இருக்குமோ என்று பலரும் கற்பனை செய்ய ஆரம்பித்து விட்டனர்.
பார்த்திபன் காரு.. நீங்களே சொல்லிடுங்க.. இது எந்த மாதிரியான கதை என்பதை!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்
{{comments.comment}}