"தமிழரின் வீரம்.. ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு.. அரசு வேலை".. இயக்குநர் அமீர் கோரிக்கை

Jan 18, 2024,06:19 PM IST

சென்னை: ஜல்லிக்கட்டு விளையாட்டினை அரசுப்பணி உட்பிரிவில் சேர்க்கவும், அதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்கிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார்.


தைத்திருநாளாம் பொங்கல் திருநாள் அன்று தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும்  விதமாக ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. இந்த வருடம் மதுரை அவனியாபுரம், பாலமேடு, மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டுப் விளையாட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. 


குறிப்பாக உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி கோலாகலமாக  நடைபெற்றது. இதில் ஏராளமான காளைகளும், காளையர்களும் கலந்து கொண்டனர். இதனைக் காண ஏராளமான மக்கள் வெளி ஊர்களில் இருந்தும் வந்து ஜல்லிக்கட்டு விழாவை கண்டு களித்தனர். அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.




இந்நிலையில் இயக்குனர் அமீர் உச்ச நீதிமன்றத்திடம் போராடிப் பெற்ற நமது கலாச்சார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தமிழக அரசின் அரசுப்பணி இட ஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக, “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில்,


”தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்

தெரிபு தெரிபு குத்தின ஏறு..

கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும் 

புல்லாளே ஆய மகள்..”


என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.


மேலும், இன்று மதுரை அலங்காநல்லூரிலும், கடந்த இரு தினங்களாக அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிளும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.


”தமிழர் வீரம் வீணாகாது – தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!” என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது: டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை: அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

news

Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

news

தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

news

இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

news

ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்