அரசு மரியாதையுடன் நாளை இயக்குநர் பாக்யராஜின் உடல் தகனம்

Jun 27, 2026,01:58 PM IST

சென்னை : மறைந்த இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜின் உறுதிச்சடங்குகள் நாளை பிற்பகல் நடைபெறும் என்றும், அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட கே.பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்த நிலையில், அவரது உடலுக்கு முதல்வர் விஜய், நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.




இந்நிலையில் மறைந்த கே.பாக்யராஜ் உடல் நாளை பிற்பகல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் தமிழ் சினிமாவிற்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் கே.பாக்யராஜின் இறுதி சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அரசு மரியாதையுடன் நாளை இயக்குநர் பாக்யராஜின் உடல் தகனம்

news

முதல்வர் விஜய், உதயநிதி உட்பட 55 எம்எல்ஏ.,க்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு

news

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: பொது வேட்பாளராக சீமான் களம் காண்கிறாரா?

news

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்: பொதுக்குழு கூட்டத்தில் அதிரடி முடிவு!

news

தமிழ் சினிமாவின் ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ்: முடிவுக்கு வந்த சகாப்தம்

news

இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்

news

தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை

news

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?

news

தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!

அதிகம் பார்க்கும் செய்திகள்