சென்னை : தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் டைரக்டர்களில் ஒருவராக இருப்பவர் ஹச்.வினோத். சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்து, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் ஹச்.வினோத். இவரது படங்கள் பெரும்பாலும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டதாகவே இருக்கும்.
தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு என அடுத்தடுத்த வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் இவர் கடைசியாக இயக்கிய துணிவு படம் உலக அளவில் ரூ.200 கோடியை வசூல் செய்தது. கடந்த வாரங்களாகவே ஹச்.வினேத்தின் அடுத்த படம் என்ன, இவர் அடுத்து எந்த ஹீரோவை இயக்க போகிறார் என்ற பேச்சு தான் கோலிவுட்டில் தீவிரமாக அடிபட்டு வருகிறது.
துணிவு படத்தை தொடர்ந்து ஹச்.வினோத், கமலின் KH 233 படத்தை இயக்க போவதாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிறகு சொல்லப்பட்டது. வினோத் சொன்ன போலீஸ் கதை கமலுக்கு பிடிக்கவில்லை என்றும், கமல் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார் என்றும் KH 233 படம் தள்ளி போவதற்கு இரு வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. கமல் தற்போது Thung life, கல்கி 2898 AD, இந்தியன் 2, இந்தியன் 3 என பிஸியாக இருப்பதால் இந்த படங்களை முடித்த பிறகு KH 233 படத்தின் வேலைகளை துவக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது.
இதற்கிடையில் வினோத், கார்த்தியை வைத்து தீரன் 2 படத்தையும் இயக்க போகிறார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் கார்த்தியும் தற்போது மற்ற படங்களில் பிஸியாக இருக்கிறாராம். மற்றொரு புறம் கமலின் KH 233 படத்திற்கு அன்பறிவு தான் சண்டை காட்சிகள் அமைக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டதால் வினோத், அடுத்ததாக கமலின் KH 233 ஐ தான் இயக்க போகிறார் என்றும் தகவல் பரவியது.
ஆனால் லேட்ஸ்ட் தகவலின் படி, வினோத் அடுத்ததாக இயக்க போவது கமலையோ அல்லது கார்த்தியையோ இல்லையாம். KH 233, தீரன் 2 இடங்களின் வேலைகளையும் ஒத்திவைத்து விட்டு, இந்த இடைப்பட்ட காலத்தில் அரசியல், காமெடி படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளாராம் வினோத். இந்த படத்தின் ஹீரோ வேறு யாரும் அல்ல. யோகி பாபு தானாம். இந்த படத்திற்கான கதை யோகிபாபுவிற்கு பிடித்து விட்டதால் அவரும் இந்த படத்திற்காக டேட் ஒதுக்கி தருவதாக சொல்லி விட்டாராம். இந்த படத்திற்கு தான் வினோத் தற்போது திரைக்கதை அமைத்து வருகிறாராம். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கும் ஒரு முக்கிய ரோல் இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படம் பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}