Pushpa 2: பாட்னாவில் பற்றிய காட்டுத் தீ நாடு முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது.. ராஜமெளலி

Nov 18, 2024,03:26 PM IST

சென்னை: பாட்னாவில் பற்றிய காட்டுத் தீ நாடு முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது. டிச 5ம் தேதி வெடித்துச் சிதறப்போகிறது என்று  புஷ்பா 2 திரைப்படம் குறித்து இயக்குனர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.


சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு உருவாகி மெகா ஹிட் வெற்றி பெற்ற படம் தான் புஷ்பா. இப்படம் இந்தியா முழுவதிலும் ரூ.500 கோடி வசூலில் சாதனை பெற்றது. பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில் வெற்றி பெற்ற  தெலுங்கும் படமாக இப்படம் கருதப்படுகிறது. இந்த படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.




மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின்  டீசர், கிளிம்ப்ஸ், பாடல்கள வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமாக்கியது. புஷ்பா 2 அடுத்த மாதம் 5ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் டிரெயிலர் தமிழ், தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நேற்று வெளியாகியது. இந்த டிரெயிலர் வெளியான 15 மணி நேரத்தில் 37 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்துள்ளது.


பாட்னாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அல்லு அர்ஜூன் ட்ரெயிலரை ரிலீஸ் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜூன் ரசிகர்களே தன்னுடைய அனைத்து வெற்றிகளுக்கும் ஆதாரம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், புஷ்பா 2 குறித்து இயக்குனர் ராஜமவுலி, பாட்னாவில் பற்றிய காட்டுத் தீ நாடு முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது. டிச 5ம் தேதி வெடித்துச் சிதறப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

ரஜினியை சந்தித்த சிம்ரனின் நெகிழ்ச்சி பதிவு... இணையத்தில் வைரல்!

news

2026ல் தேர்தலில் திமுகவை விஜய்யால் வீழ்த்த முடியாது: விசிக தலைவர் திருமாவளவன்

news

வாட்ஸ்ஆப்பில் வந்த இன்விடேஷன்.. பட்டுன்னு திறந்த அரசு ஊழியர்.. பொட்டுன்னு போன ரூ. 2 லட்சம்!

news

வரலட்சுமியின் மறைவுக்கு கொலைகார திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

இந்தி மொழியை திணிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

Coffee lovers pl listen.. அதிகாலையில் காபி குடிக்கக் கூடாது.. ஏன் தெரியுமா?

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.800 உயர்வு... கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

news

2027 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், விராட் கோலி விளையாட வாய்ப்பு.. குட் நியூஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்