சென்னை: பாட்னாவில் பற்றிய காட்டுத் தீ நாடு முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது. டிச 5ம் தேதி வெடித்துச் சிதறப்போகிறது என்று புஷ்பா 2 திரைப்படம் குறித்து இயக்குனர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு உருவாகி மெகா ஹிட் வெற்றி பெற்ற படம் தான் புஷ்பா. இப்படம் இந்தியா முழுவதிலும் ரூ.500 கோடி வசூலில் சாதனை பெற்றது. பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில் வெற்றி பெற்ற தெலுங்கும் படமாக இப்படம் கருதப்படுகிறது. இந்த படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர், கிளிம்ப்ஸ், பாடல்கள வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமாக்கியது. புஷ்பா 2 அடுத்த மாதம் 5ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் டிரெயிலர் தமிழ், தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நேற்று வெளியாகியது. இந்த டிரெயிலர் வெளியான 15 மணி நேரத்தில் 37 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்துள்ளது.
பாட்னாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அல்லு அர்ஜூன் ட்ரெயிலரை ரிலீஸ் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜூன் ரசிகர்களே தன்னுடைய அனைத்து வெற்றிகளுக்கும் ஆதாரம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், புஷ்பா 2 குறித்து இயக்குனர் ராஜமவுலி, பாட்னாவில் பற்றிய காட்டுத் தீ நாடு முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது. டிச 5ம் தேதி வெடித்துச் சிதறப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}