Pushpa 2: பாட்னாவில் பற்றிய காட்டுத் தீ நாடு முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது.. ராஜமெளலி

Nov 18, 2024,03:26 PM IST

சென்னை: பாட்னாவில் பற்றிய காட்டுத் தீ நாடு முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது. டிச 5ம் தேதி வெடித்துச் சிதறப்போகிறது என்று  புஷ்பா 2 திரைப்படம் குறித்து இயக்குனர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.


சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு உருவாகி மெகா ஹிட் வெற்றி பெற்ற படம் தான் புஷ்பா. இப்படம் இந்தியா முழுவதிலும் ரூ.500 கோடி வசூலில் சாதனை பெற்றது. பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில் வெற்றி பெற்ற  தெலுங்கும் படமாக இப்படம் கருதப்படுகிறது. இந்த படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.




மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின்  டீசர், கிளிம்ப்ஸ், பாடல்கள வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமாக்கியது. புஷ்பா 2 அடுத்த மாதம் 5ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் டிரெயிலர் தமிழ், தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நேற்று வெளியாகியது. இந்த டிரெயிலர் வெளியான 15 மணி நேரத்தில் 37 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சாதனை படைத்துள்ளது.


பாட்னாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அல்லு அர்ஜூன் ட்ரெயிலரை ரிலீஸ் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜூன் ரசிகர்களே தன்னுடைய அனைத்து வெற்றிகளுக்கும் ஆதாரம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், புஷ்பா 2 குறித்து இயக்குனர் ராஜமவுலி, பாட்னாவில் பற்றிய காட்டுத் தீ நாடு முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது. டிச 5ம் தேதி வெடித்துச் சிதறப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

India win Women's world cup: அபார பீல்டிங்.. அட்டகாச பவுலிங்.. இந்திய மகளிருக்கு முதல் உலகக் கோப்பை!

news

SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

news

அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக

news

SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்