மைக் வச்சு பேசுனா அவர் குருவா.. இதைப் போய் உக்காந்து கேக்கறீங்களே.. இயக்குநர் செல்வராகவன் சுளீர்!

Sep 10, 2024,06:11 PM IST

சென்னை: உண்மையான குரு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவே மாட்டார். தியானம் பண்றதுக்கு நீங்க அவ்ளோ காஞ்சுபோயா இருக்கீங்க? தியானம்தான் இந்த உலகத்திலேயே எளிமையான விஷயம். உலகத்தில் இருக்கும் எல்லா மதங்களும் போதிக்கிறது கடவுள் நமக்குளே இருக்கிறார் என்று தான் என்று இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் பொட்டில் அடித்தாற் போல தெரிவித்துள்ளார். 


மதுரையைச் சேர்ந்தவர் மகாவிஷ்ணு. பரம்பொருள் பவுண்டேஷன் என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை அசோக் நகரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்  மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போன பிறவியில் செய்த பாவத்தால்தான் இந்தப் பிறவியில் கண் தெரியாமல் கால் கை இல்லாமல் பிறக்கிறார்கள். நோய்களால் அவதிப்படுகிறார்கள் என்றெல்லாம் இவர் பேசினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இவரது பேச்சிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.


இந்நிலையில், மகாவிஷ்ணு போன்றோர் குறித்து அதிரடியாக பேசி ஒரு வீடியோ போட்டுள்ளார் இயக்குநர் செல்வராகவன். அதில் அவர் கூறியிருப்பதாவது:




யாரோ ஒருத்தர் எதையோ உளறிக்கிட்டு நான் தான் ஆன்மீக குரு என்று சொன்னால் நீங்களும் பெட்ஷீட் எல்லாம் எடுத்துக்கொண்டு அவர் பேசுவதை கேட்க 100 பேராக கிளம்பிடுவீங்களா. உண்மையான குருவை நீங்கள் தேடி போக வேண்டாம். அவரே உங்களை தேடி வருவார். தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுத்துவிட்டு வருபவர்கள் ஆன்மீக குரு கிடையாது. உண்மையான குரு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவே மாட்டார்.


தியானம் பண்றதுக்கு நீங்க அவ்ளோ காஞ்சுபோயா இருக்கீங்க? தியானம்தான் இந்த உலகத்திலேயே எளிமையான விஷயம். உலகத்தில் இருக்கும் எல்லா மதங்களும் போதிக்கிறது கடவுள் நமக்குளே இருக்கிறார் என்று தான். உங்கள் மனசு என்ன சொல்லுதோ அதுதான். இருப்பதிலேயே எளிமையானது புத்தர் சொல்லும் வழிதான். நீங்கள் மூச்சு விடுவதை மட்டுமே கவனித்தபடி இருங்கள், வேறு எந்த சிந்தனை வந்தாலும் அதை தவிர்க்க முயற்சி செய்யாதீர்கள். இதை தொடர்ந்து செய்யும் போது தேவையில்லாத சிந்தனைகள் எல்லாம் நின்று விடும். 


காலங்கள் போகப் போக மற்ற எண்ணங்கள் எல்லாம் தன்னாலே நின்று விடும். இதை தான் புத்தர் சொல்கிறார். நீச்சல் அடிக்க அடிக்கத்தான் ஒரு நாள் நீச்சல் வரும். இதற்கு உலகத்தில் யாராவது மாற்றுக்கருத்து சொல்வதாக இருந்தால் சொல்லுங்கள். ஆனால் இதற்கு மாற்றுக் கருத்தே கிடையாது என்று கூறியுள்ளார் செல்வராகவன்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்