என்னாது செல்வராகவன் அழுதுட்டாரா.. டிவிட்டரில் குவிந்து உச்சு கொட்டிய ரசிகர்கள்!!

Nov 20, 2023,08:03 PM IST

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா அடைந்த படுதோல்வியை கண்டு தனது ரியாக்சன் எப்படி இருந்தது என்பதை டைரக்டர் நடிகர் ஆன செல்வராகவன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.


நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்து, கோப்பைக் கனவு தகர்ந்து போனது. இந்த போட்டியை வீட்டில் அமர்ந்து தனது குடும்பத்துடன் பார்த்து ரசித்துள்ளார் செல்வராகவன். ஆனால் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது தோல்வியை கண்டு அவர் வேதனைப்பட்டாராம்.


அப்போது தனது ரியாக்சன் எப்படி இருந்தது என்பதை செல்வராகவன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், நேற்று கிரிக்கெட்டில் தோற்றப் பிறகு அழுது கொண்ட இருந்தேன். எனது கண்ணீர் எதற்காக என்பது எனது குழந்தைகளுக்கு புரியவில்லை. பாவம் தந்தை அழுது அவர்கள் இதுவரை பார்த்ததில்லை. இது விளையாட்டில் தோற்றதற்காக வந்த கண்ணீர் அல்ல. எனது நாடு தோல்வி அடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் வந்த கண்ணீர் என உணர்ச்சிப்பூர்வமாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.




துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் டைரக்டராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான செல்வராகவன், 7 ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு வெளியான சாணி காகிதம் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.


தன்னுடைய கருத்துக்களை அவ்வப்போது ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார் தன்னுடைய படங்கள் பற்றிய அப்டேட்டுகளையும் அவர் வெளியிட்டு வருகிறார். கிரிக்கெட் பைனலில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோவதை , ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே பலரும் உணர்ந்து விட்டனர். தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் கூட டிவியை ஆப் செய்துவிட்டனர். இருந்தாலும் விடாப்பிடியாக முழு நம்பிக்கையுடன் கடைசி வரை கிரிக்கெட் பார்த்தவர்களில் செல்வராகவனும் ஒருவர் போல.


 அதனால்தான் இப்படி ஒரு ட்ரீட் போட்டுருக்காரு. கிரிக்கெட் விளையாடியதற்கு தாங்கள் உயிரை கொடுத்து விளையாடியதற்காக தோல்வியடைந்ததற்கு நேற்று மைதானத்திலேயே இந்திய வீரர் முகம்மது சிராஜ் அழுதார். இதை நேரில் காண சென்ற ரசிகர்கள் பலரும் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதனர். இருந்தாலும் மற்றவர்கள் சரிதான் விடுப்பா விளையாட்டில் இதெல்லாம் சகஜம் என சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருந்தார்கள் ஆனால் செல்வராகவும் தான் வீட்டில் உட்கார்ந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார் போலும்.


சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்