என்னாது செல்வராகவன் அழுதுட்டாரா.. டிவிட்டரில் குவிந்து உச்சு கொட்டிய ரசிகர்கள்!!

Nov 20, 2023,08:03 PM IST

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா அடைந்த படுதோல்வியை கண்டு தனது ரியாக்சன் எப்படி இருந்தது என்பதை டைரக்டர் நடிகர் ஆன செல்வராகவன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.


நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்து, கோப்பைக் கனவு தகர்ந்து போனது. இந்த போட்டியை வீட்டில் அமர்ந்து தனது குடும்பத்துடன் பார்த்து ரசித்துள்ளார் செல்வராகவன். ஆனால் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது தோல்வியை கண்டு அவர் வேதனைப்பட்டாராம்.


அப்போது தனது ரியாக்சன் எப்படி இருந்தது என்பதை செல்வராகவன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், நேற்று கிரிக்கெட்டில் தோற்றப் பிறகு அழுது கொண்ட இருந்தேன். எனது கண்ணீர் எதற்காக என்பது எனது குழந்தைகளுக்கு புரியவில்லை. பாவம் தந்தை அழுது அவர்கள் இதுவரை பார்த்ததில்லை. இது விளையாட்டில் தோற்றதற்காக வந்த கண்ணீர் அல்ல. எனது நாடு தோல்வி அடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் வந்த கண்ணீர் என உணர்ச்சிப்பூர்வமாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.




துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் டைரக்டராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான செல்வராகவன், 7 ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு வெளியான சாணி காகிதம் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.


தன்னுடைய கருத்துக்களை அவ்வப்போது ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார் தன்னுடைய படங்கள் பற்றிய அப்டேட்டுகளையும் அவர் வெளியிட்டு வருகிறார். கிரிக்கெட் பைனலில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோவதை , ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே பலரும் உணர்ந்து விட்டனர். தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் கூட டிவியை ஆப் செய்துவிட்டனர். இருந்தாலும் விடாப்பிடியாக முழு நம்பிக்கையுடன் கடைசி வரை கிரிக்கெட் பார்த்தவர்களில் செல்வராகவனும் ஒருவர் போல.


 அதனால்தான் இப்படி ஒரு ட்ரீட் போட்டுருக்காரு. கிரிக்கெட் விளையாடியதற்கு தாங்கள் உயிரை கொடுத்து விளையாடியதற்காக தோல்வியடைந்ததற்கு நேற்று மைதானத்திலேயே இந்திய வீரர் முகம்மது சிராஜ் அழுதார். இதை நேரில் காண சென்ற ரசிகர்கள் பலரும் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதனர். இருந்தாலும் மற்றவர்கள் சரிதான் விடுப்பா விளையாட்டில் இதெல்லாம் சகஜம் என சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருந்தார்கள் ஆனால் செல்வராகவும் தான் வீட்டில் உட்கார்ந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார் போலும்.


சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்