அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்திற்குப் பிறகு, ரசிகர்கள் புஷ்பா 3 எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருந்தனர். இப்போது, இயக்குனர் சுகுமார் புஷ்பா 3 கண்டிப்பாக உருவாகும் என்று உறுதியளித்துள்ளார்.
துபாயில் நடந்த SIIMA விருது விழாவில், புஷ்பா குழுவினர் ஐந்து விருதுகளை வென்றனர். அப்போது, தொகுப்பாளர்கள் சுகுமாரிடம் புஷ்பா 3 பற்றி கேட்டனர். முதலில் விளையாட்டாகப் பதிலளித்த அவர், பின்னர் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோரைப் பார்த்து, "புஷ்பா 3 நிச்சயம் உண்டு" என்று உறுதியாகக் கூறினார். மேலும், ஃபஹத் பாசில் பேசிய "பார்ட்டி லேதா புஷ்பா?" என்ற வசனத்தையும் அவர் நினைவுகூர்ந்தார்.
துபாயில் நடந்த சைமா விழாவில், புஷ்பா படத்திற்கு ஐந்து விருதுகள் கிடைத்தன. அதாவது அல்லு அர்ஜுன் - சிறந்த நடிகர், ராஷ்மிகா மந்தனா - சிறந்த நடிகை, சுகுமார் - சிறந்த இயக்குனர், தேவி ஸ்ரீ பிரசாத் - சிறந்த இசையமைப்பாளர், சங்கர் பாபு கண்டுகுரி - சிறந்த பின்னணி பாடகர் (பீலிங்ஸ் பாடல்) என ஐந்து விருதுகளை அப்படம் அள்ளியது.

தற்போது, அல்லு அர்ஜுன் இயக்குனர் அட்லியுடன் இணைந்து AA22xA6 என்ற அறிவியல் படத்தில் நடிக்கிறார். அதேபோல, சுகுமார் ராம் சரணுடன் RC17 படத்தில் வேலை செய்கிறார். இந்த இரண்டு படங்களும் முடிந்த பிறகு, அல்லு அர்ஜுனும் சுகுமாரும் மீண்டும் இணைந்து புஷ்பா 3-ஐ உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. அதனால் ரசிகர்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}