லியோ ரிலீஸ்.. டிக்கெட் கட்டணத்தில் விதி மீறலா.. புகார் கூற நம்பர்கள் அறிவிப்பு!

Oct 17, 2023,09:40 AM IST

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ பட வெளியீட்டின்போது நடைபெறும் முறைகேடுகள் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவிக்க ஆரம்பித்துள்ளனர்.


லியோ படத்துக்கு தமிழ்நாட்டு மக்களிடையே வரலாறு காணாத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படம் குறித்த எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு படம் குறித்த சர்ச்சைகளும் அதிகமாகவே உள்ளன.




அரசுத் தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.  19ம் தேதி முதல் 24ம் தேதி வரை தினசரி 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும். முதல் காட்சி காலை 9 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு 1.30 மணிக்கு கடைசிக் காட்சி முடிய வேண்டும். அரசு அறிவித்த டிக்கெட் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். ரசிகர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பார்க்கிங் முறைப்படுத்தப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.


விதி மீறல்கள் இருந்தால் அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மாவட்டந்தோறும் அதிகாரிகள் இப்போதே நடவடிக்கையில் இறங்கி விட்டனர்.


ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும் புகார் கூறுவதற்கான தொலைபேசி எண்களை அறிவித்து வருகின்றனர். புகார்கள் இருந்தால் இந்தத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தரலாம் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் கோட்டம் வாரியாக தொலைபேசி எண்களை ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்