சென்னை: தீபாவளியை முன்னிட்டு, மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 31ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பள்ளி கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பொது அரசு அலுவலகங்கள், ஆகியவற்றிற்கு வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என மொத்தம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தீபாவளியை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதற்காக இன்றிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே புதுச்சேரி அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளிக்கு முந்தின நாள் அரசு விடுமுறை என மொத்தம் ஐந்து நாட்கள் விடுமுறையாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தீபாவளி நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பள்ளி கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை முற்பகல் வரை மட்டுமே செயல்படும். பிற்பகல் அரை நாள் விடுமுறை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துளளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}