Deepavali: தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு.. நாளை அரை நாள் விடுமுறை அறிவிப்பு!

Oct 29, 2024,06:44 PM IST

சென்னை: தீபாவளியை முன்னிட்டு,  மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 31ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பள்ளி கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பொது அரசு அலுவலகங்கள், ஆகியவற்றிற்கு வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு  என மொத்தம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.




இதனால் மக்கள் தீபாவளியை  கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதற்காக இன்றிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே புதுச்சேரி அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளிக்கு முந்தின நாள் அரசு விடுமுறை என மொத்தம் ஐந்து நாட்கள் விடுமுறையாக அறிவித்துள்ளது. 


இந்த நிலையில் தீபாவளி நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 


அதன்படி தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு  பள்ளி கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை முற்பகல் வரை மட்டுமே செயல்படும். பிற்பகல் அரை நாள் விடுமுறை  என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துளளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்