சென்னை: தீபாவளியை முன்னிட்டு, மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 31ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பள்ளி கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பொது அரசு அலுவலகங்கள், ஆகியவற்றிற்கு வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என மொத்தம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தீபாவளியை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதற்காக இன்றிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே புதுச்சேரி அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளிக்கு முந்தின நாள் அரசு விடுமுறை என மொத்தம் ஐந்து நாட்கள் விடுமுறையாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தீபாவளி நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பள்ளி கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை முற்பகல் வரை மட்டுமே செயல்படும். பிற்பகல் அரை நாள் விடுமுறை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துளளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}