- மீனா
சென்னை: தீபாவளி வந்தாச்சு.. புது டிரஸ்ஸு எடுக்க கடைகளில் கூட்டம் அலைமோதுது.. இந்த வாட்டி பட்டாசை எப்படித் தூக்கிப் போட்டு வெடிக்கலாம்னு பிள்ளைங்க பிளான் போட்டுட்டிருக்கு.. மறுபக்கம் "கிச்சன் மகாராணிகள்".. இந்த வாட்டி இதைப் பண்ணி அசத்தலாமா.. அதைப் பண்ணி திகைக்க வைக்கலாமா என்று "திகிலூட்டும்" பிளான்களில் மும்முரமாக உள்ளனர்.
இருங்கங்க.. எங்களுக்கும் பதட்டமாத்தான் இருக்கு.. இருந்தாலும்.. "இதுவும் கடந்து போய்ரும்"னு மனசைத் தேத்திக்கிட்டு.. இந்த ஜோக்ஸைப் படிச்சு ஆறுதல் பட்டுக்கங்க..!
என் கையால செஞ்சு தர்றேன்னு சொன்னேன்!
மனைவி: பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாரும் தீபாவளிக்கு ஊருக்கு போறாங்களாம்.
கணவன்: எல்லாருமா?
மனைவி: அட ஆமாங்க. நான் என்ன பொய்யா சொல்றேன்.
கணவன்: தீபாவளிக்கு பலகாரம் தரேன்னு சொன்னியா?
மனைவி: ஆமாங்க .நானே என் கையால செஞ்சு கொண்டு வந்து தரோன்னு சொன்னேன்.
கணவன்: அப்புறம் எப்படி வீட்ல இருப்பாங்க.
மனைவி :😡😡
--
அதுக்குத்தாங்க ஜீராவோட சாப்பிடச் சொன்னேன்!
கணவன்: தீபாவளிக்கு நீ செஞ்ச இனிப்பு சீடை ரொம்ப நல்லா இருக்குமா .
மனைவி: போங்க எப்ப பாத்தாலும் உங்களுக்கு விளையாட்டு தான்
கணவன்: நான் என்ன விளையாடினேன்
மனைவி: நான் தீபாவளிக்கு செஞ்சது குலோப் ஜாமுன் அதை சீடைனு சொல்றீங்க.
கணவன்: என்னாது.. குலோப் ஜாமுனா!
மனைவி: அதுக்குதான் ஜீராவோட சேர்த்து சாப்பிடுங்கன்னு சொன்னேன். நீங்க கேட்காதது என் குத்தமா.
கணவன்: நீ சொன்னது அப்ப புரியல. இப்ப புரியுது எதுக்குன்னு.
--
நபர் 1: தீபாவளிக்கு புதுசா ஒரு வெடி வந்து இருக்காம்.
நபர் 2: அப்படியா என்ன ஸ்பெஷல்.
நபர் 1: யாரும் பத்த வைக்கணும்னு அவசியமே இல்லையாம்.
நபர் 2: அப்படியா !அப்புறம் எப்படி வெடிக்கும்.
நபர் 1: வீட்ல இருந்தாலே வெடிச்சுக்கிட்டே இருக்குமாம்.
நபர் 2: வெடி பேரு?
நபர் 1: மாமியார் மருமகள் வெடியாம்.😂😂😂
--
நண்பன் 1: என்னடா தீபாவளிக்கு புது டிரஸ் எல்லாம் எடுத்துட்டியா
நண்பன் 2: அதுக்கு தாண்டா உன்கிட்ட வந்து இருக்கேன்.
நண்பன் 1: என்கிட்டயா எதுக்குடா?
நண்பன் 2: இல்ல டிரஸ் எடுக்க பணம் பத்தல. ஒரு ஆயிரம் ரூபாய் இருந்தா கொடு .நான் அடுத்த மாசம் திருப்பி கொடுத்துடுறேன்.
நண்பன்1: எனக்கும் செலவு அதிகம் . கையில "சுத்தமா" பணம் இல்லைடா.
நண்பன் 2: சுத்தமா இல்லாட்டியும் பரவாயில்லைடா.. நான் கிளீன் பண்ணிக்கிறேன்!
நண்பன் 1:😳😳
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}