சென்னை: கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ரிஷிவந்தியம் சட்டசபைத் தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திடீரென விம்மி விம்மி குழந்தை போல அழவே கூட்டத்தினர் பெரும் சோகமாகி விட்டனர்.
ஆனால் பிரேமலதா உடைந்து போய் அழுததற்குப் பின்னாடி ஒரு பிளாஷ் பேக் இருக்கு.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார். பின்னர் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்ட சபை தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டார். அப்போது விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.

அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன்தான் முதல் முறையாக விஜயகாந்த் கூட்டணி அமைத்தார். 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் முறையாக அவர் இந்த ஆண்டுதான் கூட்டணி அரசியலில் நுழைந்தார். இந்தத் தேர்தலில் தேமுதிக அதிக தொகுதிகளை பெற்ற 2வது கட்சியாக உயர்ந்தது. அதாவது எதிர்க்கட்சியாக உருவெடுத்தது, திமுக 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. இந்தத் தேர்தலுக்குப் பிறகு தேமுதிகவுக்கு சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி கானல் நீராகி விட்டது. இதுவரை வெற்றி பெறவே முடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ளது.
அந்த வகையில் இந்த ரிஷிவந்தியம் தொகுதி தேமுதிகவுக்கு மிக முக்கியமானது. அப்படிப்பட்ட தொகுதியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டபோதுதான் பழைய நினைவுகள் வந்து கண்ணீர் விட்டுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். அவர் பேசும்போது, ரிஷிவந்தியம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த எனக்கு தலைவர் விஜயகாந்த் வாழ்ந்த நாட்கள் தான் ஞாபகம் வருகிறது. கேப்டன் விஜயகாந்த் மக்களை சந்தித்து எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். எங்கு சென்றாலும் இதுபோல உண்மையான தொண்டர்களை என்னால் பார்க்க முடியாது. அதனால் தான் விஜயகாந்த் வாழ்ந்த இந்த தொகுதியை என்னால் மறக்க முடியாது என்று கூறி அழுதார்.
மேடையில் அமர்ந்திருந்த பிரேமலதா விஜயகாந்த் குழந்தை போல தேம்பித் தேம்பி அழுத காட்சியை தொண்டர்களும் உருக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}