ரிஷிவந்தியத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டம்.. விம்மி விம்மி அழுத பிரேமலதா விஜயகாந்த்.. என்னாச்சு?

Apr 01, 2024,11:35 AM IST

சென்னை: கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ரிஷிவந்தியம் சட்டசபைத் தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்  திடீரென விம்மி விம்மி குழந்தை போல அழவே கூட்டத்தினர் பெரும் சோகமாகி விட்டனர்.


ஆனால் பிரேமலதா உடைந்து போய் அழுததற்குப் பின்னாடி ஒரு பிளாஷ் பேக் இருக்கு.


தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார். பின்னர் 2006 ஆம் ஆண்டு  நடந்த சட்ட சபை தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டார். அப்போது விருதாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.




அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன்தான் முதல் முறையாக விஜயகாந்த் கூட்டணி அமைத்தார்.  2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் முறையாக அவர் இந்த ஆண்டுதான் கூட்டணி அரசியலில் நுழைந்தார். இந்தத் தேர்தலில் தேமுதிக அதிக தொகுதிகளை பெற்ற 2வது கட்சியாக உயர்ந்தது. அதாவது எதிர்க்கட்சியாக உருவெடுத்தது, திமுக 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.  இந்தத் தேர்தலுக்குப் பிறகு தேமுதிகவுக்கு சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி கானல் நீராகி விட்டது. இதுவரை வெற்றி பெறவே முடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ளது.


அந்த வகையில் இந்த ரிஷிவந்தியம் தொகுதி தேமுதிகவுக்கு மிக முக்கியமானது. அப்படிப்பட்ட தொகுதியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டபோதுதான் பழைய நினைவுகள் வந்து கண்ணீர் விட்டுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.  அவர் பேசும்போது, ரிஷிவந்தியம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த எனக்கு தலைவர் விஜயகாந்த் வாழ்ந்த நாட்கள் தான் ஞாபகம் வருகிறது. கேப்டன் விஜயகாந்த் மக்களை சந்தித்து எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். எங்கு சென்றாலும் இதுபோல உண்மையான தொண்டர்களை என்னால் பார்க்க முடியாது. அதனால் தான் விஜயகாந்த் வாழ்ந்த இந்த தொகுதியை என்னால் மறக்க முடியாது என்று கூறி அழுதார்.


மேடையில் அமர்ந்திருந்த பிரேமலதா விஜயகாந்த் குழந்தை போல தேம்பித் தேம்பி அழுத காட்சியை தொண்டர்களும் உருக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சமீபத்திய செய்திகள்

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்